தமிழக அரசியலில் அசாதாரண சூல்நிலை நிலவும் வேலையில் பலரும் இந்த சமயத்தை பயன்படுத்தி தங்களது ஆதிக்கத்தை செலுத்தவும் தங்கள இருப்பிடத்தை தமிழக மக்களிடம் நிருவவும் முயற்சி செய்து வருகின்றனர்.
அதில் தமிழ் திரையுளகமும் விதிவிளக்கல்ல. ஆண்டாண்டு காலமாக தமிழத்தின் ஆளுமைகளை திரையுலகம் தான் கொடுத்தது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை. அந்த வேலையில் தற்போதைய திரையுலகமும் இறங்கியுள்ளது.
அரசியல் பேசுவது அனைவரின் உரிமை தான், ஆனால் திடீர் அரசியல் பலர் பேசுவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. திரையுலகில் ரஜினி, கமல்ஹாசன், சீமான் முதல் கரு பழனியப்பன், அமீர் என படத்தில் அரசியல் பேசும் கோபி, ரஞ்சித் என பலரும் திரையுளகை சேர்ந்தவர்கள் தான்.
தங்களுக்கு திரையில் கிடைத்த பிரபலத்தை வைத்து அரசியல் செய்வதுடன் களத்தில் இறங்கி வேலை செய்யத் துவங்கிவிட்டனர் கமஹாசன் போன்றோர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய இயக்குனர் அமீர் இந்த திரையுலக அரசியல் குறித்து பேசியுள்ளார்.
தற்போது கட்சியை ஆரம்பிக்கவுள்ள கமல்ஹாசன் தமிழகத்தை ஆள சரியான தலைவர் இல்லை எனவும், விஜய்க்கு நல்ல மாஸ் இருக்கிறது. மக்களிடம் அவருக்கு வரவேற்பு அதிகம் இருக்கிறது, சில காலம் பொருத்திருந்து பார்த்தால் விஜய் தலைமை ஏற்பதும் நடக்கலாம் எனக் கூறியுள்ளார் இயக்குனர் அமீர்.