பிணங்களை தின்னும் அகோரி கொடுத்த மாலை – அதுவும் இது எதனால் செய்யப்பட்டதுனு தெரிஞ்சா ஷாக்காவீங்க.

0
12290
bala
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். மேலும், இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அது மட்டும் இல்லாமல் பாலா அவர்கள் சினிமா உலகில் இயக்குனராக ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று உள்ளார். பொதுவாக படம் என்றால் ஹீரோ ஆக்ஷன், ஹீரோயின் அழகு, காதல், ரொமான்டிக் என படமே கலர்ஃபுல்லாக இருக்கும். ஆனால் இவருடைய படத்தைப் பொருத்த வரை அழுகை, அழுக்கு, கருப்பு என்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய படத்தில் ஹீரோனா— ஆக்ஷன்,மாஸ்; ஹீரோயினினா– அழகாகவும்,வெள்ளையாகவும் சினிமாவில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது மட்டும் இல்லாமல் பாடலுக்காக படம் இல்லை. படத்தில் பாடல்கள் ஒன்று , இரண்டு இருந்தால் போதும் என்று ஒட்டு மொத்த சினிமாவின் நிலைமையை மாற்றி வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா.

- Advertisement -

மேலும், இவர் 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான “சேது” படத்தை முதன் முதலாக இயக்கினார். அதோடு இவர் இயக்கிய முதல் படத்திலேயே மக்களிடையே பயங்கர வரவேற்பை பெற்றார். மேலும்,அவர் மீது நல்ல நம்பிக்கையும் எழுந்தது. அதற்கு பிறகு இயக்குனர் பாலா அவர்கள்” நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார்” உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார்.

இதையும் பாருங்க : விஜயகாந்த் கூட இப்படி சொன்னது இல்லனு விஜய் கிட்ட சொன்னேன் – உன்னை நினைத்து படத்தில் இருந்து விஜய் விலகிய காரணம் குறித்து விக்ரமன்.

அதே போல பாலா ஒரு டெரரான ஆள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அவர் நான் கடவுள் படத்தில் வருவது போல நிஜத்திலும் கொஞ்சம் டெரர் தான். இயக்குனர் பாலா, கழுத்தில் மண்டை ஓட்டால் ஆன மாலை ஒன்றை அணிந்து இருக்கிறார். அது இறந்துபோன 108 நபர்களின் இடுப்பு எலும்பில் செய்யப்பட்ட மாலையாம், இதனை அகோரி ஒருவர் பாலாவிற்கு கொடுத்தாராம்.

-விளம்பரம்-
Advertisement