ஹாஸ்பிடல் போறதுக்கு முன்னாடி சேசு அனுப்பிய கடைசி மெஜேஜ்- கண்ணீருடன் இயக்குனர் கார்த்தி யோகி பேட்டி

0
375
- Advertisement -

நடிகர் சேசு இறப்பு குறித்து இயக்குனர் கார்த்திக் யோகி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் சேசு இறப்பு குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக இருந்தவர் லொள்ளு சபா சேசு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சேசு.

-விளம்பரம்-

இவர் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தான் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். அதற்கு பின் இவர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வடிவேலு நடிப்பில் வெளியாகி இருந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் இவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பூமர் அங்கிள், ராயர் பரம்பரை போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இவர் வெள்ளி திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார்.

- Advertisement -

மருத்துவமனையில் அனுமதி :

இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இவர் பூசாரி கதாபாத்திரத்தில் பரதநாட்டியம் ஆடி அசத்தி இருப்பார். படத்தில் அவருடைய காமெடியும், பரதநாட்டியமும் வைரலாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கே இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சேசு மரணம்:

பின் இவர் விரைவில் குணமடைந்து வருவார் என்று கூறப்பட்டது. கடந்த சில தினங்களாகவே இவர் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் தான் சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி நடிகர் சேசு காலமாகி விட்டார். இவருடைய மறைவு இணையதளத்தில் வெளியானதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். தற்போது இவருக்கு 60 வயது ஆகிறது. இந்த நிலையில் நடிகர் சேசுவின் மறைவு குறித்து வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இயக்குனர் கார்த்தி யோகி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

கார்த்தி யோகி பேட்டி:

அதில் அவர், ரொம்ப நல்ல மனிதர். வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் பரதநாட்டியம் சீன் எடுக்கும்போது அவருக்கு 45 வயது தான் இருக்கும் என்று நினைத்தேன். பின் பரதநாட்டியம் ஆடுறீங்களா? என்று கேட்டேன். அதுக்கு அவர், ஆடிட்டா போச்சு என்று அசால்டா சொல்லி ஆடினார். ஆனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது தான் அவருக்கு 60 வயது என்று எனக்கு தெரிந்தது. சேசு அண்ணாவுக்கு காமெடி சென்ஸ் ரொம்பவே அதிகம். அவர் பேசுற டயலாக் எல்லாமே காமெடியாக இருக்கும். மற்ற காமெடி நடிகர்கள் ஒரு வரியில் பன்ச் மாதிரி சொல்வார்கள். ஆனால், சேசு எல்லாம் பாடி லாங்குவேஜ் மூலம் காமெடி பண்ணி அசத்துவார்.

சேசு குறித்து சொன்னது:

அவருடைய பலம் என்னவென்று சந்தானம் சாருக்கு நன்றாகவே தெரியும். காரணம், அவர்கள் இரண்டு பேருமே ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். எல்லா படத்திலேயும் பூசாரி, ஐயர் கதாபாத்திரமே நடிக்கிறேன். போலீஸ் கதாபாத்திரம் கொடு என்று சொன்னார். நான் என்னுடைய அடுத்த படத்தில் கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் என்று சொன்னேன். ஆனால், இப்போது அவர் இல்லை. அவருக்காகவே ஒரு கதாபாத்திரத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறேன். மேலும், மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு எனக்கு சேசு மெசேஜ் பண்ணி இருந்தார். பரதநாட்டியம் வீடியோ ஒரு மில்லியன் போய்விட்டது. செம வைரல் ஆகிடுச்சு சந்தோசமாக இருக்கு என்று சொன்னார். உடனே நான் அதை ரிபோர்ட் பண்ணி டெலிட் பண்ண சொல்கிறேன் என்று சொன்னேன். உடனே அவர், அதெல்லாம் பண்ணிடாதீங்க, நமக்கு ரீச் ஆனா சரி தான் என்ன சொன்னார். அந்த மெசேஜை நான் என்னுடைய மொபைலில் இன்னும் அப்படியே வைத்திருக்கிறேன். தமிழ் சினிமா ஒரு சிறந்த காமெடி நடிகரை இழந்திருக்கிறது என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Advertisement