மெர்சல் பட வெற்றிக்குப் பிறகு விஜயின் அடுத்த படத்தை முருகதாஸ் இயக்கவுள்ளதாக தற்போது உறுதியாகியுள்ளது. இந்த படத்திற்கான கேஸ்ட்&க்ரூவை கவனமாக தேர்வு செய்து வருகிறார்.
சமீபலாமாக துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் தான் விஜய்62 வாக வருகிறது என சமூக வலை தளங்களில் ரசிகர்களால் வைரலாக பேசப்பட்டது. ஆனால், விஜய்62 படத்தின் இயக்குனர் முருகதாஸ் இந்த செய்தியை மறுத்துள்ளார். துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் தான் தற்போது எடுக்கப்படவுள்ளதா? எனற கேள்விக்கு பதில் அளித்த முருகதாஸ்,
இதையும் படிங்க: மெர்சல் படத்தின் வெற்றிக்கு காரணமான சரியான 5 விஷயங்கள்!
இல்லை, துப்பாக்கி படத்தில் சொல்ல நினைத்த அனைதையும் சொல்லிவிட்டேன், அதே படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால், போர் அடிக்கும்படியாக இருக்கும்.’
விஜய்62 படத்தில் புதிய கதையை வைத்திருக்கிறேன், விஜய்க்கு இந்த படம் அவரது வாழ்க்கையில் முக்கியமான படமாக அமையும்’
படத்தின் வேலைகள் வரும் ஜனவரி மாதம் துவங்கவுள்ளது. அடுத்த வருட தீபாவளிக்கு படத்தை வெளியிட தயாராகி வருகிறோம்’
எனக் கூறினார் முருகதாஸ்.