அட, கொடுமையை எஸ் பி ஜனநாதன் வீட்டில் நேர்ந்த அடுத்த இழப்பு – சோகம் தாங்காமல் ஏற்பட்ட மாரடைப்பு.

0
1618
- Advertisement -

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் உடல் நலக் குறைவால் இயக்குனர் ஜனநாதன் காலமாகி இருந்த நிலையில் தற்போது அவரது வீட்டில் அடுத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழில் கடந்த 2003ஆம் ஆண்டு நடிகர் ஷாம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளியான இயற்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்பி ஜனநாதன். இயற்கை படத்தை தொடர்ந்து தமிழில் இவர், ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்று பல்வேறு படங்களை இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

இயற்கை திரைப்படத்திற்கு பின்னர் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சமூக பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்தது. தனது முதல் படமான இயற்கை படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றார் ஜனநாதன். இறுதியாக ஜெயம்ரவி நடித்த ‘பூலோகம்’ திரைப்படத்தில் எழுத்தாளராக பணியாற்றிய ஜனநாதன் தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்து வந்த ‘லாபம்’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார்.

இதையும் பாருங்க : இதுநாள் வரை ஏற்பட்ட பிரச்சனைக்கு இவர் தான் காரணம், தெரியாம உங்கள திட்டிட்டேன் என்ன மன்னிச்சிருக்க. அந்தர் பல்டி அடித்த மீரா.

- Advertisement -

இயக்குநர் SP ஜனநாதன் அவர்களுக்கு கடந்த சில தினம் முன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடுத்த நாளே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜனநாதனின் மறைவிற்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் நேரில் சென்று இரங்கலை தெரிவித்தனர்.

அதிலும் விஜய் சேதுபதி தான் பெரும் சோகத்தில் ஆழ்ந்தார். ஜனநாதனின் மருத்துவச் செலவு முழுவதையும் நடிகர் விஜய்சேதுபதி ஏற்றுக் கொண்டதாகவும் மருத்துவமனையில் அவர் தனது சொந்த பணத்தில் மருத்துவமனையின் பில்லை செட்டில் செய்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் சோகம் தாங்காமல் மாரடைப்பு காரணமாக அவரது தங்கை லட்சுமி நேற்று உயிரிழந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement