போன வருஷம் உங்க முதல் பிள்ளைய கூட்டிட்டு வரல இப்போ மட்டும் ஏன் – விமர்சனத்திற்கு உள்ளான திவ்யா

0
4114
Divya
- Advertisement -

கடந்த ஆண்டு சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருந்தது அர்னவ்-திவ்யா விவகாரம் தான். இவங்க வேற யாரும் இல்லைங்க, செல்லம்மா சீரியல் நடிகர் ஆர்னவ், செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து இருந்தார்கள்.பின் கடந்த ஆண்டு தான் ரகசியமாக திருமணம் செய்து இருந்தனர். இவர்கள் இருவரும் இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

அதோடு இதற்கு முன்பே திவ்யாவிற்கு திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருக்கிறார். இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது? அவர் யார்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. பின் இவர் இரண்டாவதாக அர்னவை திருமணம் செய்து கொண்டார்.மேலும், திருமணம் ஆகி கொஞ்ச நாட்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்து இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

அதோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார்.மேலும், காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் திவ்யா புகார் கொடுத்து இருந்தார். இது குறித்து அர்னவ் விளக்கமளித்து இருந்தார்.

அதுமட்டும் இல்லாமல் அவர் திவ்யா மீது குற்றச்சாட்டு வைத்து இருந்தார். இப்படி இருவருமே மாற்றி மாற்றி பேட்டி கொடுத்திருந்தார்கள். இதை தொடர்ந்து திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அர்னவ் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து போலீஸ் அர்னவை கைது செய்தனர். பின் அர்னவ் ஜாமினில் வெளியில் வந்தார். வெளியில் வந்த பின்னரும் கர்ப்பமாக இருந்த திவ்யாவை அர்னவ் கண்டுகொள்ளவே இல்லை.

-விளம்பரம்-

பிரசவத்திற்கு கடைசி மாதம் வரை கூட ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் திவ்யா. இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்து இருந்தது. ஆனாலும், திவ்யாவை நேரில் சென்று சந்திக்காமல் இருந்தார் அர்னவ். மேலும், திவ்யாவும் தனது மகளை இதுவரை அர்னவ்விற்கு காட்டாமல் இருந்து வருகிறார். குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் தனது குழந்தையுடன் ஷூட்டிங்கிற்கு சென்று இருந்தார் திவ்யா.

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அர்னவ்வை தான் விமர்சித்து வந்தனர், இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சன் குடும்ப விருதுகள் ஒன்றின் ப்ரோமோவை திவ்யா பகிர்ந்து உள்ளார். அதில் தனது இரன்டு மாத குழந்தையுடன் சென்று இருந்தார் திவ்யா. இதனை கண்ட பலர் திவ்யாவின் நிலையை கண்டு வருத்தப்பட்டாலும் பெரும்பாலானோர் இரண்டு மாத குழந்தையை யாராவது இப்படி விருது விழாவிற்கு அழைத்து வருவார்களா ? இதையெல்லாம் அன்டன்ஸனுக்காக செய்கிறீர்களா என்று கூறி வருகின்றனர்.

Advertisement