ஆண்களுக்கும் ஹனிட்ராப், இலங்கைப் பெண்ணையும் கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட அர்னவ் – திவ்யா வெளியிட்ட புதிய ஆதாரம்.

0
1779
- Advertisement -

இலங்கைப் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி நடிகர் அர்னவ் கழட்டி விட்டு விட்டார் என்று திவ்யா ஆதாரத்துடன் வெளியிட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருந்தது அர்னவ்-திவ்யா விவகாரம் தான். இவங்க வேற யாரும் இல்லைங்க, செல்லம்மா சீரியல் நடிகர் அர்னவ், செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-
arnav

பின் கடந்த ஆண்டு தான் ரகசியமாக திருமணம் செய்து இருந்தனர். இவர்கள் இருவரும் இதற்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்து இருந்தார்கள். அதோடு இதற்கு முன்பே திவ்யாவிற்கு திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருக்கிறார். இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது? அவர் யார்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. பின் இவர் இரண்டாவதாக அர்னவை திருமணம் செய்து கொண்டார். மேலும், திருமணம் ஆகி கொஞ்ச நாட்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்து இருந்தார்.

- Advertisement -

அர்னவ்-திவ்யா விவகாரம்:

இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார். அதோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார். இதனை அடுத்து காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் திவ்யா புகார் கொடுத்து இருந்தார்.

அர்னவ் அளித்த பேட்டி:

இதனை அடுத்து அர்னவ் திவ்யா மீது குற்றச்சாட்டு வைத்து இருந்தார். இப்படி இருவருமே மாற்றி மாற்றி பேட்டி கொடுத்திருந்தார்கள். இதை தொடர்ந்து திவ்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அர்னவை கைது செய்தனர். பின் அர்னவ் ஜாமினில் வெளியில் வந்தார். வெளியில் வந்த பின்னரும் கர்ப்பமாக இருந்த திவ்யாவை அர்னவ் கண்டுகொள்ளவே இல்லை. பிரசவத்திற்கு கடைசி மாதம் வரை கூட ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் திவ்யா. இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்தது.

-விளம்பரம்-

இனி யாரும் பாதிக்க கூடாது :

ஆனாலும், திவ்யாவை நேரில் சென்று சந்திக்காமல் இருந்தார் அர்னவ். மேலும், திவ்யாவும் தனது மகளை இதுவரை அர்னவ்விற்கு காட்டாமல் இருந்து வருகிறார். குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் தனது குழந்தையுடன் ஷூட்டிங்கிற்கு சென்று இருந்தார் திவ்யா. இந்த நிலையில் சமீபத்தில் திவ்யா கைக்குழந்தையோடு பிரபல டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர், அர்னவ் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார். அவர்கள் எல்லோரும் எனக்கு தொடர்ச்சியாக போன் செய்தும், இன்ஸ்டாகிராம் மூலமும் பல ரகசியங்களை தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை நான் இங்கே மக்களுக்கு தெரியப்படுத்துகிறேன். இனி யாரையும் அர்னவால் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் என்னுடைய நோக்கம்.

எனக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு போன் மெசேஜ் பண்ணி இருந்தார். பிரசன்னா என்கிற என்னுடைய பிரண்டையும் அர்னவ் இப்படித்தான் ஏமாற்றி விட்டார் என்று சொல்லி பிரசன்னாவுடன் எடுத்த போட்டோ எல்லாம் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அர்னவ் சக்தி சீரியலில் நடித்துக் கொண்டு இருக்கும் போது ஜிம் போய்ட்டு இருந்திருக்கார். அப்பதான் அந்த இலங்கைப் பெண்ணான பிரசன்னாவுடன் அர்னவிற்கு அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. முதலில் அந்த பெண் ரசிகர் என்கிற மாதிரி தான் பேசி இருக்கிறார். பிறகு தான் அப்படியே அவர்களுக்குள் லவ் வந்தது. அந்த பொண்ணு லவ் பண்ணதுக்கு முன்னாடி அர்னவ் தனியா தான் வீடு எடுத்து தங்கி இருந்தார். பின் கல்யாணம் பற்றி அந்த பெண் பேச சொல்லி இருக்கிறார். ஆனால், அதற்கு அர்னவ் ஒத்துக்கொள்ளவில்லை.

அப்போதான் அந்தப் பெண் கன்சீவ் ஆக இருந்திருக்கிறார். அதுவரைக்கும் நல்லா பழகிக் கொண்டிருந்த அர்னவ் அந்தப் பெண் கன்சீவ் ஆனதும் அவாய்ட் பண்ண தொடங்கி இருக்கிறார். அதற்கு பிறகு நடந்தது எல்லாம் எனக்கு அர்னவ் பிரண்ட் நேசம் அண்ணா தான் எல்லாத்தையும் சொன்னார். இதுகுறித்து நேசம் கூறியிருப்பது, திவ்யா சொல்வதெல்லாம் உண்மைதான். எப்போதுமே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது தான் எனக்கு போன் பண்ணுவான். அப்படித்தான் அன்று போன் பண்ணி நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னான். அதோட அந்த பொண்ணு கர்ப்பமாக இருப்பதையும் சொன்னான். அபார்ஷன் பண்ணனும் என்று சொன்னான். நான் தான் அவனுக்காக ஹாஸ்பிடலுக்கு ஆபாச பண்ணுவதற்காக கூட போனேன் என்று சொல்லி இருக்கிறார். இப்படி இந்த விஷயம் மட்டும் இல்லாமல் அர்னவ் குறித்து இன்னும் பல விஷயங்கள் பற்றி என்னிடம் ஆதாரமும் இருக்கு. எல்லாத்தையும் விரைவில் வெளியிடுவேன் என்று கூறியிருக்கிறார்

Advertisement