பக்கத்துல இருந்து பார்த்தா மாதிரி எழுதுவாங்க, தோள்ல துண்டு போட்டு பஞ்சத்துக்கு வந்திருக்காங்க – மோகன் போட்ட பதிவு.

0
6127
mohan
- Advertisement -

சமுதாயத்தில் இருக்கும் ஜாதிகளை ஒழிக்க பலரும் பாடுபட்டு கொண்டிருக்கின்றனர் ஆனாலும் ஜாதிக் கொடுமைகள் ஜாதி கௌரவக் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த கருப்பர் கூட்டம் விவகாரம், பெரியார் சிலை மீது காவி சாயம் போன்ற பல்வேறு சர்ச்சைகளும் நாம் கடந்து தான் வந்திருக்கிறோம். அதே தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளையும் நாம் அடிக்கடி பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இப்படி ஒரு நிலையில் விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தில் ஊர் பஞ்சாயத்து முன் தலித் பெறுவர்களை காலில் விழ வைத்துள்ள சமத்துவம் தமிழ் நாட்டில் இன்னமும் ஜாதி வெறி இருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.

-விளம்பரம்-

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது ஒட்டனந்தல் என்ற கிராமம் .கடந்த 12ஆம் தேதி இந்த கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் தலித் இனத்தை சேர்ந்தவர்கள் திருவிழா நடத்தி இருக்கிறார்கள்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வேறு சில சாதியினர் கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு முறைகளை மீறி கோவில் திருவிழா நடைபெறுவதாக போலீசுக்கு புகார் தெரிவித்து இருக்கிறார்கள். பின்னர் அங்கு வந்த போலீசார் திருவிழாவை நிறுத்தி இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : வேலை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் அதற்கு நான் கொடுத்தது பரிசு என் அம்மா உயிர் – கொரோனாவிற்கு அம்மாவை பறிகொடுத்த ரோஜா சீரியல் நடிகை.

- Advertisement -

மறுநாள் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் போலீசாருக்கு புகார் அளித்த வேறு சாதி நபரை சேர்ந்தவரிடம் திருவிழாவிற்கு செய்த செலவு எல்லாம் வீணாகிவிட்டது ஏன் இப்படி போலீசாரிடம் புகார்அளித்தீர்கள் என்று வாக்குவாதம் செய்துள்ளார்கள். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தவர் கிராம பஞ்சாயத்திடம் இந்த பிரச்சனை குறித்து கூறியுள்ளார். பின்னர் கிராமத்தினர் சேர்ந்து பஞ்சாயத்தை கூட்டி உள்ளனர்.

இந்த பஞ்சாயத்தின் போது தாங்கள் செய்தது தவறுதான் என்று காலனி பகுதியை சேர்ந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். அப்போது அங்கிருந்த மற்ற சாதியினர் வாயால் சொன்னால் போதாது என்று காலனி பகுதியில் இருந்த தலித் இனத்தை சேர்ந்த மூன்று பெரியவர்களை அசுரன் படத்தில் வருவது போல பஞ்சாயத்தின் காலில் விழவைத்து இருக்கிறார்கள் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவியது. இதுதொடர்பாக நீலம் பண்பாடு மையம் என்ற ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பகிரப்பட்டு இருந்தது.

இதையும் பாருங்க : விருது விழாவில் திரிஷா பின்னால் அமர்ந்துகொண்டு சைட் அடித்துள்ள இளம் நடிகர் – திரிஷாவே பகிர்ந்த புகைப்படம். (அவருக்கு 27 திரிஷாக்கு 38)

-விளம்பரம்-

அதில், சாதிய தீண்டாமை வெறியர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடு தலித் மக்களுக்கு பாதுகாப்பு அளித்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தனர். இந்த டீவீட்டை பகிர்ந்த இயக்குனர் ரஞ்சித், உலகமே கொரோனா தொற்றுக்கு அழிந்து கொண்டிருக்கிறது, ஆனால் இந்த சாதிவெறியர்களின் வன்மம் மட்டும் அடங்குவதாய் இல்லை!! தமிழக அரசு அடக்க முயற்சிக்குமா??என்று ட்வீட் செய்து இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் இந்த ட்வீட் குறித்து பதிவிட்டுள்ள திரௌபதி இயக்குனர் மோகன், இதுல நடந்த உண்மை என்னன்னு பக்கத்துல இருந்து பார்த்தா மாதிரி எழுதுவாங்க பாருங்க. தோலில் துண்டு போட்டு பஞ்சாயத்துக்கு வருவதே இங்கு அனைவரும் சமம் என உணர்த்துவதை யாரும் உணர மாட்டர்கள். அங்கு பேசப்படும் குரல்களும் மீடியாவின் காதுகளில் விழாது. இந்த மக்களை அண்ணன் தம்பியா வாழ விடுங்க..காலில் விழுந்தவர்கள் வாக்குமூலம் தான் இதில் முக்கியம்.. அவர்களை இந்த பஞ்சாயத்து விழ சொல்லி இருந்தால் அவர்களுக்கு தண்டனை நிச்சயம் தர வேண்டும் மாறாக இதில் எதோனும் குழி வெட்டப்பட்டு அவர்களாக விழுந்து இருந்தால் பாவப்பட்ட ஜனங்க பழிய தாங்கி தான் ஆகனும்.. வேற என்ன வழி என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement