பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் தற்போது திரௌபதி படம் வெளியாகி இருக்கிறது நேற்று பிப்ரவரி 28 வெளியான இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்துள்ளார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதன் பின்னர் கிரிவலம் நாளை யுகா தமிழகம் பெண் சிங்கம் போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்னதான் அஜித்தின் மைத்துனர் ஆக இருந்தாலும் இவருக்கு சினிமாவில் ஒரு நிலையான அங்கீகாரம் கிடைக்கவில்லை இறுதியாக 2016 ஆம் ஆண்டு வெளியான அந்தமான் என்ற படத்தில் நடித்திருந்தார் அதன்பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.தற்போது நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் திரௌபதி படத்தின் மூலம் ஒரு மாஸ் என்ட்ரியில் மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கியிருக்கிறார்.
இதையும் பாருங்க : இவரோட டைரக்சன்ல அக்காவை நடிக்க வைக்க வேணாம்- இப்படி சொன்ன ஊர்வசியையே படத்தில் அறிமுகம் செய்த பாக்யராஜ்.
திரௌபதி திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தின் டிரைலர் வெளியான போதே இந்த படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை தாக்கி பல்வேறு வசனங்கள் இடம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் இந்த படத்தில் இடம்பெற்ற பல்வேறு வசனங்கள் சென்சார் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, இந்த படம் சமூகத்தில் நிலவும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகி உள்ளது. பதிவு திருமண ஊழல்களை சுட்டி காட்டியுள்ளார்கள். சமூகத்தில் நடக்கும் நாடக காதல் பெயரில் நிலவும் சம்பவங்களை பற்றி வெளிப்படையாக காட்டி உள்ளது.
சமூகத்தில் நிலவும் ஜாதி கொடுமைகளையும், சாதிவெறியர்களையும், ஜாதியால் நடக்கும் ஆவணக் கொலைகளையும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுளள்து. இந்தப்படத்தை கிரவுட் ஃபண்டிங் என்ற கூட்டு முயற்சி மூலம் நண்பர்கள் சேர்ந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்தப்படத்தை கிரவுட் ஃபண்டிங் என்ற கூட்டு முயற்சி மூலம் நண்பர்கள் சேர்ந்து தயாரித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தின் பட்ஜெட் வெறும் 1 கோடிக்கும் குறைவு என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் நேற்று ஒரு நாள் மட்டும் இந்த படம் 80 லட்சம் ஷேரை இந்த படம் பெற்றுக்கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல தமிழகம் முழுதும் 1 கோடியே 80 லட்ச ரூபாயை முதல் நாளிளேயே வசூல் செய்துள்ளதாகவும் கூறுபடுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில் முதல் நாளிலேயே படத்தின் பட்ஜெட்டை தாண்டி லாபத்தை பெற்ற திரைப்படம் திரௌபதி என்ற பெருமையை பெற்றுள்ளது.