இவனுங்கள உயிரோட விட்டா – வேலூர் மாணவி சம்பவம் குறித்து திரௌபதி இயக்குனர் போட்ட ட்வீட்.

0
3746
mohan
- Advertisement -

வேலூர் மாவட்டம் பாகாயம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் பாகாயம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அந்த மாணவிக்கு 15 வயது தான் ஆகிறது. இவர் பென்னாத்தூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்த மாணவியின் வீட்டு பாத்ரூமில் மேற்கூரை இல்லை. அதை வீட்டில் உள்ள பெரியவர்களும் சரி செய்ய வில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் பாத்ரூமில் குளித்து கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆகாஷ் என்பவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த ஆகாஷூக்கு பூனை கண்ணன் என்று இன்னொரு பெயரும் உள்ளது.

-விளம்பரம்-
கைது செய்யப்பட்ட 3 பேர்

இந்த பூனை கண்ணனுக்கு 22 வயது ஆகிறது. மேலும், இந்த பூனை கண்ணன் அந்த பெண் குளிக்கும் வீடியோ எடுக்க தன்னுடன் பிளஸ்-2 முடித்துள்ள 17 வயது சிறுவர்களையும் அழைத்து சென்றுள்ளார். மொத்தம் 3 பேர் சேர்ந்து தான் இந்த கேவலமான வேலையை செய்து உள்ளனர். இது குறித்து எதுவுமே அந்த சிறுமிக்கு தெரியாது. இந்த நிலையில் ஒரு நாள் அந்த மாணவியை நேரில் பார்த்து தன்னுடைய ஆசைக்கு இணங்கும்படி தொல்லை தந்துள்ளனர் அந்த கொடூர பாவிகள்.

- Advertisement -

பின் தங்கள் எடுத்த வீடியோ குறித்தும் அந்த பெண்ணிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், இதை அந்த மாணவி நம்பவே இல்லை. அதற்கு பிறகு 3 பேரும் சேர்து வீடியோவை அந்த மாணவிக்கு சொந்தக்காரரின் செல்போனுக்கு அனுப்பி வைத்து மாணவியை பார்க்க சொல்லி மெசேஜ் தந்துள்ளனர். இதை பார்த்து அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். பிறகு பயந்து போய் அந்த வீடியோவை டெலிட் செய்தார். அந்த 3 வெறி நாய்களின் ஆசைக்கு இணங்கும்படி அவர்கள் கூப்பிட்டு காட்டுப்பக்கம் ஒதுங்க மனசில்லாமல், வீடியோ இருப்பதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்த அந்த மனைவி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். எரிந்து கொண்டு இருந்த மாணவியின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அந்த பெண்ணை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி அவர்கள் ‘இவனுங்கள உயிரோட விட்டா நாட்டுக்கு கேடு. கொளுத்தி விட்ரனும் அப்படியே’ என்று கோபமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வெறி பிடித்த நாய்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்று சோசியல் மீடியாவில் பல கருத்துக்கள் வருகின்றது.

-விளம்பரம்-
Advertisement