இதனால் தான் எதிர் நீச்சல் தொடரில் நடிக்க ஒப்புக்கொண்டேன் – Trpக்கு முக்கிய காரணமாக இருக்கும் மாரிமுத்து சொன்ன காரணம்.

0
1537
marimuthu
- Advertisement -

சினிமா முதல் சீரியல் அனுபவம் குறித்து எதிர்நீச்சல் மாரிமுத்து அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்கள் உரிமையை மையமாக கொண்ட கதை. தற்போது இந்த சீரியல் பல அதிரடி திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அசத்தி வருபவர் நடிகர் மாரிமுத்து. சீரியலில் இவர் மதுரை ஸ்லாங்கில் பேசி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறார். இந்த சீரியலின் வெற்றிக்கு மாரிமுத்துவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இந்தம்மா ஏய் என்ற டிரேட் மார்க்கிற்குச் சொந்தக்காரர் மாரிமுத்து. மேலும், இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார்.

- Advertisement -

மாரிமுத்து திரைப்பயணம்:

அது மட்டும் இல்லாமல் இவர் இயக்குனர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதன் பின் மாரிமுத்து அவர்கள் “கண்ணும் கண்ணும்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு இவர் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களின் நடித்து இருக்கிறார். தற்போது மாரிமுத்து ஜெயிலர் போன்ற படங்களில் நடித்து வந்தாலும், சன் டிவியில் மிகப்பிரபலமான எதிர்நீச்சல் சீரியலிலும் நடித்து வருகிறார்.

மாரிமுத்து அளித்த பேட்டி:

இந்த நிலையில், சமீபத்தில் மாரிமுத்து அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், நான் சினிமாவில் நுழைந்து நிறைய அடி வாங்கி இருக்கிறேன். வறுமை என்னை மிகவும் வாட்டி எடுத்திருக்கிறது. திரும்பவும் அந்த ட்ராக்குள் போகக்கூடாது என்று தான் நான் நடிகராக பயணித்தேன். இப்போது நான் இந்தியன் 2 , ஜெயிலர் போன்ற படத்தில் ஒரு பெரிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். மேலும், ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினி சாரிடம் எனக்கு நல்ல பழக்கம் கிடைத்தது.

-விளம்பரம்-

சீரியல் குறித்து சொன்னது:

மேலும், திருச்செல்வம் அவர்கள் எழுதிய கோலங்கள் தொடர் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத்தொடர்ந்து அவர் என்னிடம் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் குறித்து மூன்று மணி நேரம் கதை சொன்னார். எனக்கு மிகவும் பிடித்தது. பின் நான் இந்த சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதோடு, வில்லனை பெண்கள் ரசிப்பது ரொம்பவே ஆச்சரியம்! இந்த சீரியலில் பெண்களுக்கு என்னை மிகவும் பிடித்திருக்கிறது. எதிலுமே ஈசியாக நான் திருப்தி அடைய மாட்டேன்.

எதிர்நீச்சல் சீரியல்:

இதை இப்படி செய்து இருக்கலாம், அதை அப்படி செய்து இருக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருப்பேன். சீரியலிலும் அப்படி தான் என் கதாபாத்திரத்தை பற்றி நிறைய யோசித்து மாற்றம் செய்வேன். ஆதி குணசேகரன் கதாபாத்திரம் போன்று உண்மையிலேயே சிலர் இருக்கிறார்கள். சொல்ல போனால், சுரண்டையில் அப்படி ஒருத்தர் இன்னமும் இருக்கிறார். மேலும், இந்த சீரியல் 1500 எபிசோடு வரைக்கும் போகும் என்று இயக்குனர் சொல்லி இருக்கிறார். அதனால் வேறு சீரியலில் நடிக்க வாய்ப்பு இல்லை. வேற வாய்ப்புகள் அமைந்தால் கண்டிப்பாக பார்க்கலாம் என்று கூறி இருந்தார்.

Advertisement