சீரியலில் இருந்து விலகிய காயத்ரி ? இதான் காரணமா ? இனி அவருக்கு பதில் யார் தெரியுமா ?

0
5058
- Advertisement -

புது சீரியலில் இருந்து எதிர்நீச்சல் காயத்ரி விலகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரல் ஆகி வருகிறது. சன் டிவி எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். தற்போது சீரியலில் மொத்த சொத்தையும் ஜீவானந்தம் அபகரித்து விடுகிறார். இதனால் குணசேகரன் மனம் உடைந்து கை கால் செயல் இழந்து இருக்கிறார். இதனால் சொத்தை மீட்க வீட்டு பெண்கள் போராடுகிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் ஜான்சி ராணி:

இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், சீரியலில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் காயத்ரி கிருஷ்ணன். இந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கு முன் இவர் பல ஆண்டு காலமாக தொகுப்பாளராக இருந்து இருக்கிறார். அதோடு இவர் திருநங்கைகள் பற்றி பிஎச்டி பட்டமும் பெற்றிருக்கிறார். மேலும், மாடலிங்கில் இவர் கலக்கிக் கொண்டிருந்தார்.

காயத்ரி கிருஷ்ணன் குறித்த தகவல்:

இவருக்கு சிறு வயதிலிருந்தே டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்பது தான் அதிகமான ஆசை. இதனால் போராடி எம் பில் சேர்ந்து பட்டத்தை வாங்கினார். அதனை தொடர்ந்து இவர் பிஎச்டி படித்தார். முதலில் இவர் திரைத்துறையில் வாய்ப்பு தேடி அலையும் போது பல உருவ கேலிகளை சந்தித்து இருந்தாராம். சமீபத்தில் வெளியான அயலி என்ற வெப் தொடரில் மைதிலியின் அம்மாவாக இவர் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் காயத்ரி கிருஷ்ணன் நடித்திருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது எதிர்நீச்சல் சீரியல் தான்.

-விளம்பரம்-

கிழக்கு வாசல் சீரியல்:

இந்நிலையில் இவர் கிழக்கு வாசல் சீரியலில் விலகி இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, விஜய் டிவியில் இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியல் கிழக்கு வாசல். இந்த சீரியலில் எஸ்.ஏ சந்திரசேகர், ரேஷ்மா முரளிதரன், வெங்கட் ரங்கநாதன் உட்பட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தற்போது இந்த சீரியல் குறித்த புரோமோ தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும், இந்த சீரியல் ஆரம்பிப்பதற்கு முன்பே கதாநாயகனாக சஞ்சீவ் கமிட்டாகி இருந்தார்.

சீரியலில் விலகிய காயத்ரி:

பின் சில காரணங்களால் அவர் விலகி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் கிழக்கு வாசல் சீரியலில் காயத்ரி கிருஷ்ணன் நடிப்பதாக இருந்தது. இவர் கிழக்கு வாசல் சீரியலின் பூஜையிலும் கலந்து கொண்டிருந்தார். அது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் வெளியாகியிருந்தது. தற்போது அவர் திடீரென்று இந்த சீரியலில் விலகி இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. இவருக்கு பதில் சின்னத்திரை நடிகை தாரணி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே காயத்திரி கிருஷ்ணன் அவர்கள் சன் டிவி எதிர்நீச்சல் மற்றும் ஜீ தமிழ் சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இதனால் இவரால் கால்ஷீட் கொடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது

Advertisement