சீரியலில் தான் கட்டாயக் கல்யாணம், நிஜத்தில் அன்பான கணவர் – எதிர்நீச்சல் அதிரையின் கணவர் யார் தெரியுமா ?

0
3459
Aathirai
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல் ஆதிரையின் நிஜ கணவர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல்.

-விளம்பரம்-

மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. இதனால் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். இன்னொரு பக்கம் சில மாதங்களாகவே சீரியலில் ஆதிரை- அருண் குறித்த காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. அருண் குணசேகரனுக்கு எதிரியான எஸ் கே ஆர் இன் தம்பி. இதனால் குணசேகரன் அவர்கள் ஆதிரை- அருண் கல்யாணத்தை நடத்தக்கூடாது என்ற திட்டம் இருக்கிறார். பின் சொத்துக்காக கரிகாலனை ஆதிரைக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்.

சீரியலின் கதை:

ஆனால், ஆதிரை- அருண் திருமணத்தை எப்படியாவது நடத்தி வைக்க வேண்டும் என்று வீட்டில் உள்ள பெண்கள் எல்லோரும் திட்டம் போடுகிறார்கள். தற்போது சீரியலில் அனைவரும் அருண்-ஆதிரைக்கு தான் திருமணம் ஆகும் என்று பல எதிர்பார்ப்போடு இருந்தார்கள். ஆனால், கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது. இது பலருக்குமே ஷாக்கிங் ஆகத்தான் இருக்கிறது. பின் ஆதிரை- கரிகாலனுக்கு ரெஜிஸ்டர் ஆபீசில் திருமணத்தை பதிவு செய்ய குணசேகரன் வலுக்கட்டாயமாக இழுத்து செல்கிறார். இன்னொரு பக்கம் அருண் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார். இதை அறிந்து ஜனனி ஹாஸ்பிடலுக்கு சென்று அருணை பார்க்கிறார்.

-விளம்பரம்-

ஆதிரை குறித்த தகவல்:

அங்கு எஸ் கே ஆர், சாருபாலா ஆகியோர் ஜனனியிடம் கோபமாக பேசி அனுப்பி விடுகிறார்கள். இருந்தாலும், ஜனனி எப்படியாவது ஆதிரையை காப்பாற்ற வேண்டும் என்று போராடுகிறார். கரிகாலனுடன் சேர்ந்து வாழ்வாரா ஆதிரை?அருணின் நிலைமை என்ன? குணசேகரனின் எண்ணம் நிறைவேறுமா? என பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் சத்யா தேவராஜன். இவர் மாடலிங் மூலம் தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்கு பின் இவர் சன் மியூசிக் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

ஆதிரையின் நிஜ கணவர்:

அதற்கு பிறகு இவர் அருவி என்ற சீரியலின் மூலம் தான் நடிகையாக நடிக்க தொடங்கினார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது எதிர்நீச்சல் சீரியல் தான். அது மட்டும் இல்லாமல் இவருக்கு நிஜ வாழ்க்கையில் திருமணம் ஆகிவிட்டது. இவருடைய கணவரும் ஒரு பிரபலம் தான். திருமணத்திற்கு பிறகும் இவர் நடிக்க இவருடைய கணவர் ஒத்துக் கொண்டதால் தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை நடித்து வருகிறார். தற்போது இவருடைய கணவர் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement