இனி ஆதி குணசேகரன் கதாபாத்திரம் அவ்வளவுதானா ? ஏக்கத்தில் எதிர் நீச்சல் ரசிகர்கள்

0
1141
- Advertisement -

மீண்டும் குணசேகரன் இல்லாமல் எதிர்நீச்சல் சீரியலை நகர்த்த இயக்குனர் இருக்கிறார் என்று ரசிகர்கள் மத்தியில் இருந்திருக்கும் கேள்வி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல், அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். ஜனனி அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சில மாதங்களாகவே சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது.

சீரியலின் கதை;

சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதி குணசேகரன் ஜீவானந்தத்தை பழிவாங்க திட்டம் போடுகிறார். இன்னொரு பக்கம், வீட்டு பெண்கள் எல்லோரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்கள். பின் இதை குணசேகரன் கண்டுபிடித்து விடுகிறார். இனி என்ன நடக்கும் என்ற அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கும் நிலையில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து கடந்த மாதம் மாரடைப்பால் இறந்து விட்டார். இது பிரபலங்களுக்கு மட்டும் இல்லாமல் எதிர்நீச்சல் ரசிகர்களுக்கும் வேதனை அளித்து இருந்தது. இதனை அடுத்து யார் அடுத்த குணசேகரன் என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

-விளம்பரம்-

கைதான குணசேகரன்:

பின் பல போராட்டங்களுக்குப் பிறகு ஆதி குணசேகரனாக மேலராமமூர்த்தி சீரியலில் என்ட்ரி ஆகியிருந்தார். முதல் நாளே இவர் போலீசாரை எட்டி உதைத்து அதிரடியாக இருந்தது. பின் வீட்டிற்கு வந்து வழக்கம் போல் பெண்களிடம் கடுமையாக பேசி ஈஸ்வரியை வெளுத்து வாங்கி இருக்கிறார். இதனால் அனைவருமே என்ன செய்வதென்று புரியாமல் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் போலீசை உதைத்த காரணத்திற்காக குணசேகரனை போலீஸ் செய்து இருந்தது. பின் கதிர்- ஞானசேகரன் கிளம்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார்கள். ஆனால், அங்கு குணசேகரன் இல்லை.

இயக்குனர் திட்டம்:

இதனால் குணசேகரன் இல்லாமல் கதையை நகர்த்த இயக்குனர் திட்டமிட்டு இருக்கிறாரா? என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே கால்ஷீட் பிரச்சினை காரணமாக தான் வேல ராமமூர்த்தி சீரியலில் கமிட் ஆக யோசித்து இருந்தார். பின் எப்படியோ பேசி அவரை சம்மதிக்க வைத்தார்கள். தற்போது படங்களில் நடிக்கும் காரணத்தினால் அவருடைய கதாபாத்திரம் இல்லாமல் சீரியலை இயக்குனர் நகர்த்தி செல்கிறாரா? இல்லை மீண்டும் குணசேகரன் வருவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

Advertisement