என்னதான் நடக்குது ? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகை

0
2359
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல் நடிகை திடீரென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-
Ethirneechal

மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதோடு அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை வரும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல், அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். ஜனனி அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்க வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். அதோடு சில மாதங்களாகவே சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது.

சீரியலின் கதை:

சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. குணசேகரன் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி நிற்கிறார். இன்னொரு பக்கம் வீட்டு பெண்களும் தங்களுடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தங்களுக்கு தெரிந்த தொழிலில் யாருக்கும் தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஜனனி உறுதுணையாக நிற்கிறார். அப்பத்தாவும் சப்போர்ட் செய்கிறார். பின் முதன் முறையாக ஈஸ்வரி குணசேகரனை எதிர்த்து பேசுகிறார். தன் மகனுக்கு படிப்பு செலவும், மகன் விருப்பப்பட்ட அனைத்தையும் வாங்கி கொடுக்கிறார்.

-விளம்பரம்-

மாரிமுத்து இழப்பு:

இப்படி அடுத்து என்ன நடக்கும் என்று ஒவ்வொரு நாளும் பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் குணசேகரனாக நடித்த மாரிமுத்து அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சீரியலின் வெற்றிக்கு அவருடைய உடல் மொழியும், குரலும் தான் பக்கபலம். இனி அவர் இல்லாதது எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு வருத்தம் தான். அதோடு சில தினங்களுக்கு முன்பே சீரியலை வேறு ட்ராக்கில் இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார். அடுத்து குணசேகரன் வருவாரா? இல்லை வேறு யாராவது புதிய கதாபாத்திரத்தை இணைப்பாரா? என்பதை வரும் காலங்கழில் பார்ப்போம்.

நடிகையின் நிலமை:

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹரிப்பிரியா. இவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். மருத்துவமனையில் டிரிப்ஸ் ஏற்றிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை ஹரிப்பிரியா சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள், என்ன ஆச்சி? நன்றாக இருக்கிறீர்களா? சீக்கிரம் குணமடைந்து வாருங்கள் என்றெல்லாம் ஆறுதலாக கூறி வருகிறார்கள்.

Advertisement