ஒரு வழியாக தான் யார் என்ற உண்மையை சொன்ன ஜீவானந்தம், கதறி அழும் ஈஸ்வரி- எதிர்நீச்சலில் ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த விஷயம்.

0
2552
Ethirneechal
- Advertisement -

ஜீவானந்தம்- ஈஸ்வரி காதல் குறித்த எதிர்நீச்சல் சீரியலின் ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியின் உச்சசத்தில் இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆகி கொண்டு இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த தொடர் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களால் எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல், அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள்.

சீரியலின் கதை:

தற்போது சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதி குணசேகரன் பெண்களை வைத்து தன்னுடைய விளையாட்டை தொடங்குகிறார். இதனால் குணசேகரனனுக்கு வலது புறம் கை செயலிழந்து விட்டது போல் நடிக்கிறார். அதோடு ஜீவானந்தத்தை பழிவாங்க குணசேகரனும் அவருடைய தம்பி கதிரும் சேர்ந்து சென்னைக்கு சென்று போலீசாக இருக்கும் கிள்ளி வளவனை சந்தித்து ஜீவானந்தத்தை போட்டு தள்ள முயற்சிக்கிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் ப்ரோமோ:

இன்னொரு பக்கம், ஜீவானந்தத்தை பற்றி தெரிந்து கொள்ள ஜனனியும் சக்தியும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ரேணுகாவுக்கு பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைக்கிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஜீவானந்தம், ஈஸ்வரி இருக்கும் இடத்திற்கு வருகிறார். அப்போது நான் யார் என்று தெரிகிறதா? என்று கேட்டவுடன் ஈஸ்வரி அமைதியாக நிற்கிறார்.

ஈஸ்வரி-ஜீவானந்தம் காதல்:

ஒரு காலத்தில் உங்களை காதலிக்கிறேன் என்று உங்கள் தந்தையிடம் பெண் கேட்டு சென்ற அந்த ஜீவானந்தம் தான் இந்த ஜீவனந்தம் என்று சொன்னவுடன் ஈஸ்வரி அழுகிறார். பிறகு ஜீவானந்தம் சென்று விடுகிறார். ஈஸ்வரி பழைய நினைவுகளை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். இனிவரும் காலங்களில் ஈஸ்வரிக்காக ஜீவானந்தம் குணசேகரன் இடமிருந்து ஏமாற்றிய சொத்துக்களை திருப்பி தருவாரா? இல்லை ஈஸ்வரியே ஜீவானந்தத்திற்கு உறுதுணையாக இருப்பாரா? போன்ற அதிரடி திருப்பங்களுடன் சீரியல் செல்ல இருக்கிறது.

Advertisement