சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் ஜான்சி ராணி தான் – எதிர் நீச்சல் சீரியல் நடிகையின் அறிந்திராத பக்கம்.

0
2566
Jhansirani
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை.

-விளம்பரம்-

மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பி வாழுகிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக கருதி வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. இதனால் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். தற்போது சீரியலில் குணசேகரன் தன்னுடைய தங்கை ஆதிரைக்கு பிடிக்காத மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். இந்த திருமணத்தில் வீட்டில் உள்ள யாருக்குமே விருப்பமில்லை. ஆனால், குணசேகரன் தான் நினைத்தது தான் செய்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். இதனால் ஆதிரை தூக்க மாத்திரை சாப்பிட்டு சீரியசான நிலைமையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சீரியலின் கதை:

இன்னொரு பக்கம் ஆதிரையை திருமணம் செய்து கொள்ள கரிகாலன் குதிக்கிறான். கரிகாலனின் அம்மாவாக இருக்கும் ஜான்சி ராணி பயங்கர பித்தலாட்ட வேலைகளை செய்து கஞ்சா விற்கும் பெண்ணாக இருக்கிறார். இவர் எப்படியாவது குணசேகரன் வீட்டில் சம்மந்தியாக வேண்டும், மொத்த சொத்துக்களையும் அபகரிக்க பல திட்டங்களை தீட்டுகிறார். இதை முறியடிக்க ஜனனியும் வீட்டில் உள்ள மற்ற மருமகளும் போராடுகிறார்கள்.

-விளம்பரம்-

ஜான்சி ராணி பற்றிய விவரம்:

ஆதிரை- அருண் திருமணம் நடக்குமா? குணசேகரின் எண்ணம் ஜெயிக்குமா? ஜான்சி ராணி நினைத்தபடி திட்டம் நிறைவேறுமா? போன்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் வரும் ஜான்சி ராணி குறித்து பலரும் அறிந்திடாத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். சீரியலில் வரும் ஜான்சி ராணியின் உண்மையான பெயர் காயத்ரி கிருஷ்ணன். இவர் பல ஆண்டு காலமாக தொகுப்பாளராக இருந்து இருக்கிறார். அதோடு இவர் திருநங்கைகள் பற்றி phd பட்டமும் பெற்றிருக்கிறார்.

காயத்ரி கிருஷ்ணன் குறித்த தகவல்:

மேலும், மாடலிங்கில் இவர் கலக்கிக் கொண்டிருந்தார். இவருக்கு சிறு வயதிலிருந்தே டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்பது தான் அதிகமான ஆசை. இவர் எம் ஃபில் படிக்கும் போது வயது குறைவானதாக இருந்ததால் இவருடைய எம் ஃபில் பட்டதை எடுத்துக் கொள்ளமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். பின் போராடி எம் பில் சேர்ந்து பட்டத்தை வாங்கினார். அதனை தொடர்ந்து இவர் பிஎச்டி படித்தார். முதலில் இவர் திரைத்துறையில் வாய்ப்பு தேடி அலையும் போது பல உருவ கேலிகளை சந்தித்து இருந்தாராம். இவர் குண்டாக இருக்கிறார் என்று போகும் இடம் எல்லாம் இவரை ரிஜெக்ட் செய்திருக்கிறார்கள். ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் ஆரோக்கியமாக இருப்பது தான் முக்கியம் என்று உருவ கேலியை ஒதுக்கி வைத்திருக்கிறார்.

காயத்திரின் ஆசை:

சமீபத்தில் வெளியான அயலி என்ற வெப் தொடரில் மைதிலியின் அம்மாவாக இவர் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் காயத்ரி கிருஷ்ணன் நடித்திருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது எதிர்நீச்சல் சீரியல் தான். அதுமட்டுமில்லாமல் இவருக்கு அரசியலில் சேர்வதிலும் ஆசையாம். இன்னும் சில காலங்களில் அரசியல் சேர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும்,அரசியலின் மூலம் திருநங்கைகளுக்கு, எளியோருக்கு உதவ வேண்டும் என்பதுதான் இவருடைய ஆசையாம் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

Advertisement