சீரியலில் புதிய வில்லன் என்ட்ரி கொடுத்துள்ள வேளையில் – வேல ராமமூர்த்தி பதிவிட்ட புகைப்படம்

0
980
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலில் புதிய வில்லன் என்ட்ரி கொடுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பேமஸ். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். ஜனனி அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சில மாதங்களாகவே சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இன்னொரு பக்கம், வீட்டு பெண்கள் எல்லோரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்கள். பின் இதை குணசேகரன் கண்டுபிடித்து விடுகிறார். இனி என்ன நடக்கும் என்ற அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கும் நிலையில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து கடந்த மாதம் மாரடைப்பால் இறந்து விட்டார். இது பிரபலங்களுக்கு மட்டும் இல்லாமல் எதிர்நீச்சல் ரசிகர்களுக்கும் வேதனை அளித்து இருந்தது.

சீரியலின் கதை:

இதனை அடுத்து யார் அடுத்த குணசேகரன் என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. பின் பல போராட்டங்களுக்குப் பிறகு ஆதி குணசேகரனாக வேலராமமூர்த்தி சீரியலில் என்ட்ரி ஆகியிருந்தார். முதல் நாளே இவர் போலீசாரை எட்டி உதைத்தது அதிரடியாக இருந்தது. பின் இவர் வீட்டிற்கு வந்து வழக்கம் போல் பெண்களிடம் கடுமையாக பேசி ஈஸ்வரியை வெளுத்து வாங்கி இருக்கிறார். இதனால் அனைவருமே என்ன செய்வதென்று புரியாமல் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். அதன் பின் குணசேகரனை போலீஸ் செய்து இருந்தது. பின் கதிர்- ஞானசேகரன் கிளம்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார்கள். ஆனால், அங்கு குணசேகரன் இல்லை.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

இதனால் குணசேகரன் இல்லாமல் கதையை நகர்த்த இயக்குனர் திட்டமிட்டு இருக்கிறாரா? என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்திருக்கிறது. பின் குணசேகரன் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் என்றும், அவர் தன்னுடைய வக்கீல் இடம் கதிரை வளவனை சந்திக்க சொல்வது போல் காண்பித்து இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஈஸ்வரி எல்லா உண்மையும் ஜீவானந்தம் இடம் சொல்கிறார். குறிப்பாக, ஜீவானந்தத்தின் மனைவியை கொன்றது தன்னுடைய கணவர் குணசேகரன், அவருடைய தம்பி கதிர் என்றும் சொல்கிறார். இதை கேட்டு ஜீவானந்தம் உடைந்து விடுகிறார். இப்படி பல அதிரடித் திருப்புகளுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

புது வில்லன் என்ட்ரி:

இந்த நிலையில் சீரியலில் புது என்ட்ரியாகி இருக்கும் வில்லன் குறித்த தகவல்தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது குணசேகரனாக நடிக்கும் வேலராமமூர்த்தி பாரிசில் இருக்கிறார். இது குறித்து அவர் புகைப்படமும் வெளியிட்டு இருந்தார். மேலும், சீரியலை விறுவிறுப்பாக கொண்டு செல்ல இயக்குனர் புது வில்லனை அறிமுகம் செய்திருக்கிறார். அவருடைய பெயர் கிருஷ்ணா மெய்யப்பன். சீரியலில் ஜனனி- சக்தி இருவரும் சேர்ந்து வாங்க நினைக்கும் கம்பெனியை கிருஷ்ணன் மெய்ப்பன் வாங்க இருக்கிறார். இவரும் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். முதல் நாளே இவருடைய மாஸ் என்றியும் டயலாக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இனிவரும் காலங்களில் குணசேகரனை விட கிருஷ்ண மெய்யப்பன்- ஜனனியின் ட்ராக் தான் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement