பிறந்தநாள் கொண்டாடிய கையோடு வேல ராமமூர்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி – அவரே வெளியிட்ட வீடியோ.

0
362
- Advertisement -

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எதிர்நீச்சல் சீரியல் நடிகர் வேலராமமூர்த்திக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான். வாரம் வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் தான் உச்சத்தில் இருக்கும். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். பின் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். கடந்த சில வாரங்களாகவே சீரியலில் தர்ஷினி டிராக் சென்று கொண்டிருக்கின்றது. மர்ம நபர்கள் தர்ஷினியை கடத்தி சென்று விட்டார்கள். தர்ஷினியை தேடி வீட்டுப் பெண்கள் எல்லோருமே அலைந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வழக்கம் போல் குணசேகரன் பெண்களை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். தர்ஷினி கிடைப்பாரா? கடத்தியது யார்? என்று திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

வேலராமமூர்த்தி குறித்த தகவல்:

மேலும், இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் வேலராமமூர்த்தி. முதலில் இந்த கதாபாத்திரத்தில் மாரிமுத்து தான் நடித்திருந்தார். இவர் கடந்த ஆண்டு மாரடைப்பால் திடீரென்று இறந்துவிட்டார். பின் அவருக்கு பதில் குணசேகரன் கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி நடித்து வருகிறார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது எதிர்நீச்சல் சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

வேலராமமூர்த்தி பிறந்தநாள் கொண்டாட்டம்:

சீரியலில் நடித்தாலும் வேலராமமூர்த்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று வேலராமமூர்த்தி அவர்கள் தன்னுடைய பிறந்தநாளை படப்பிடிப்பில் கொண்டாடி இருக்கிறார். இதனால் அவருக்கு மாலை அணிவித்து படக்குழுவினர் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் சக நடிகர் பலருமே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இதனை அடுத்து வேலராமூர்த்தி அவர்கள் சோசியல் மீடியாவில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

வேலராமமூர்த்தி வைத்த வேண்டுகோள்:

அதில் அவர், உலகம் முழுவதும் உள்ள மக்கள் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். சந்தோஷத்தில் நான் திக்குமுக்கு ஆடி போயிருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு அதிர்ச்சியான செய்தியும் வந்தது. என்னுடைய பெயரில் அக்கவுண்ட் ஓபன் செய்து சில ரசிகர்களிடம் பணம் மோசடி செய்துள்ளனர். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ? அதை நான் பார்த்துக் கொள்கிறேன். மக்கள் யாரும் இதை நம்பி ஏமாந்து விட வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement