நடுராத்திரியில் கதறி அழும் குணசேகரன், கிண்டல் செய்யும் மருமகள்கள்- கலகலப்பாக செல்லும் எதிர்நீச்சல் சீரியல்

0
1611
Ethirneechal
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் ட்ரெண்டிங்காக இருக்கும் சீரியலில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள்.

சீரியலின் கதை:

தற்போது சீரியலில் சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது என்று வக்கீல் குணசேகரிடம் சொல்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதி குணசேகரன் மற்றும் அவருடைய தம்பிகள் கம்பெனிக்கு செல்கிறார்கள். ஆபீஸில் குணசேகரன் ஆட்களும் ஜீவானந்தமும் ஆட்களும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த ஜீவானந்தம் துப்பாக்கியில் சுடுகிறார். சொத்து மொத்தமும் ஜீவானந்தம் பெயருக்கு மாறியதை அடுத்து ஆபிஸில் பயங்கர கலவரமே வெடிக்கிறது. பின் குணசேகரனை குண்டு கட்டு ஆக தூக்கி ஜீவானந்தத்தின் ஆட்கள் வெளியே தூக்கி போட்டு விடுகிறார்கள். இதனால் என்ன செய்வதென்று புரியாமல் குணசேகரன் அதிர்ச்சியில் இருக்கிறார்.

-விளம்பரம்-

ஜீவானந்தம்-குணசேகரன் சண்டை:

பின் இவர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப் போகிறார். அங்கேயும் ஜீவானந்தம் வந்து குணசேகரன் மீது புகார் கொடுக்கிறார். ஆனால், போலீஸ் குணசேகருக்கு அறிவுரை சொல்லி வெளியே அனுப்பி விடுகிறார்கள். அப்போது குணசேகரின் ஆடிட்டர், நீங்கள் உங்கள் வீட்டுப் பெண்களை வைத்து தான் கேம் விளையாட வேண்டும். அவர்களை ஜீவானந்ததுடன் மோதவிடுங்கள் என்று கூறுகிறார். இதனால் குணசேகரன் இதுதான் சரி என்று திட்டம் போடுகிறார். பின் வீட்டுக்கு வந்த குணசேகரன் யாரிடமும் பேசாமல் பம்பி போய் ஒப்பாரி வைக்கிறார். இதை பார்த்து வீட்டில் உள்ள பெண்கள் எல்லோரும் ஏன் இவர் இப்படி பண்ணுகிறார் என்று கேட்கிறார்கள். ஒரு கட்டத்தில் குணசேகரின் பேச்சைக் கேட்டு நந்தினி உங்களுக்கு நாங்கள் ஜீவானந்தத்துடன் மோதுகிறோம். நீங்கள் பயப்படாதீர்கள், நாங்கள் சொத்தை மீட்டு தருகிறோம் என்று குணசேகரன் வலையில் சிக்குகிறார்.

இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ:

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நடுராத்திரியில் ஜீவானந்தம் துப்பாக்கியில் சுடுவது போன்ற கனவு கண்டு குணசேகரன் கத்தி கதறுகிறார். இதைக் கேட்டு அவருடைய தம்பிகளும், வீட்டில் உள்ள பெண்களும் வருகிறார்கள். வழக்கம் போல் குணசேகரன் தன்னுடைய நாடகத்தை தொடங்கி ஆடுகிறார். அவருடைய தம்பிகளும் அவரை தாங்கி பிடித்துக் கொண்டு பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டு மருமகள்கள் குணசேகரனை கேலி, கிண்டலும் செய்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆக மொத்தம் இன்றைக்கான எபிசோட் பயங்கர கலகலப்பாக செல்ல இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement