மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய குணசேகரனின் பரிதாப நிலை – அட, கடவுளே எப்படி கெத்தா இருந்த மனுஷன்

0
1744
Gunasekaran
- Advertisement -

கை- கால் செயலிழந்து மருத்துவமனையில் சீரியஸாக இருக்கும் ஆதி குணசேகரனின் நிலை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சசத்தில் இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். மேலும், இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார்.

சீரியலின் கதை:

இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சீரியலில் ஆதிரை-கரிகாலன் ட்ராக் முடிந்து தற்போது சீரியலில் சொத்து விவகாரம் சென்று கொண்டு இருக்கிறது. சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது என்று வக்கீல் குணசேகரிடம் சொல்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதி குணசேகரன் மற்றும் அவருடைய தம்பிகள் கம்பெனிக்கு செல்கிறார்கள். ஆபீஸில் குணசேகரன் ஆட்களும் ஜீவானந்தமும் ஆட்களும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

-விளம்பரம்-

ஜீவானந்தம்-குணசேகரன் சண்டை:

இதனால் ஆபிஸில் பயங்கர கலவரமே வெடிக்கிறது. பின் குணசேகரனை குண்டு கட்டு ஆக தூக்கி ஜீவானந்தத்தின் ஆட்கள் வெளியே போட்டு விடுகிறார்கள். இதனால் என்ன செய்வதென்று புரியாமல் குணசேகரன் அதிர்ச்சியில் இருக்கிறார். பின் வீட்டுப் பெண்களை வைத்து தன்னுடைய விளையாட்டை தொடங்குகிறார் குணசேகரன். இதனால் வீட்டுக்கு வந்த குணசேகரன் யாரிடமும் பேசாமல் பம்பி போய் ஒப்பாரி வைக்கிறார். இதை பார்த்து வீட்டில் உள்ள பெண்கள் எல்லோரும் ஜீவானந்தத்துடன் மோத தயாராகுகிறார்கள். பின் ஆடிட்டர் வீட்டிற்கு வந்து இந்த வீட்டையும் ஜீவானந்தம் கைப்பற்ற போகிறார் என்று சொன்னதைக் கேட்டு குணசேகரனுக்கு நெஞ்சுவலி வந்துவிடுகிறது.

குணசேகரன் நிலைமை:

இதனால் அவரை குண்டு கட்டாக மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்கிறார்கள். குணசேகரனனுக்கு அதிக அழுத்தத்தால் அவருடைய மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் குணசேகரனுக்கு வலது புறம் கை செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். இதை கேட்டு குணசேகரனின் தம்பிகள் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். குணசேகரன், இப்படி ஒரு நிலையில் வாழ முடியாது ஊசி போட்டு என்னை கொன்றுவிடுங்கள் என்று அழுகிறார். இன்னொரு பக்கம் ஜீவானந்தத்தை சந்திக்க ஜனனி, ஈஸ்வரி, நந்தினி மூவரும் செல்கிறார்கள். இனி உண்மையிலேயே குணசேகரின் கை,கால் செயல் இழந்து விட்டதா? நடிக்கிறாரா? ஜீவானந்தத்தை ஜனனி- ஈஸ்வரி சந்தித்தார்களா? ஜீவானந்தத்தின் முடிவு தான் என்ன? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் செல்கிறது.

Advertisement