தமிழ் சினிமாவில் என்றென்று ஹிட் பாடல்களாக உப்பு கருவாடு,காற்றே என் வாசல் வந்தாய், தாண்டியா ஆட்டமும் ஆடா என பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தி இவர் தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் தன்னுடைய குரலின் மூலம் ரசிகர்களை கட்டி இழுத்தவர். இவர் டெல்லியில் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி 1958ஆம் ஆண்டு சாரதா கிருஷ்ணமூர்த்தி தம்பதிக்கு மகளாக பிறந்தார்.
தந்தை தாய் :
இவரது தாய் கல்வி மற்றும் கலாசார அமைச்சராக பணிபுரிந்து வந்தார். இவருடைய தாய் பாரம்பரிய இந்திய இசையின் மீது பற்று கொண்டவராக இருந்து வந்த நிலையில் கவிதா கிருஷ்ணமூர்த்தி தொடக்கத்தில் இஸ்துஸ்தானி இசையைத்தான் கற்றுள்ளார். பின்னர் தான் மும்பையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் பிரபல இசையமைப்பளாரான ஹேமந்த் குமாருடன் இணைந்து பெங்காலில் பாடலை தன்னுடைய 9 வயதில் பாடினார்.
ஹிந்தி அறிமுகம் :
பின்னர் தன்னுடைய கல்லூரியில் போட்டிக்காக வந்திருந்த ஹேமந்த் குமாரின் மகள் மூலம் மீண்டும் அவரை சந்தித்து வரின் மூலம் மேடை கச்சேரியில் பாடும் வாய்ப்பை பெற்றார். பின்னர் நடிகை ஹேமாமாலனியின் அன்னையின் மூலம் இசையமைப்பாளர் லட்சிமிகாந்திடம் அறிமுகமானார். அதுக்கு பிறகு தான் 1980ஆம் ஆண்டு முதன் முறையாக “மாக் புரூ சஜ்னா” என்ற பாடலை பாடினார். பின்னர் ஐந்து வருடங்கள் கழித்து “ப்யார்” ஜிக்தா என்ற படத்தில் “தும்சே மில்கள் நா ஜானே க்யூன்” என்ற பாடலை பாடினார்.
தமிழில் பாடல்கள் :
அதற்கு பிறகு பாடிய ஹாவா ஹாவா, கருத்தே ஹைன் ஹாம் போன்ற பாடல்கள் இவரை மேலும் பிரபல படுத்தியது. இதனை தொடர்ந்து லட்சிமிகாந்த் ப்யாரேலாவுடன் இணைந்து பல வெற்றி படங்களில் பாடல்களை பாடினார். உதாரணமாக அக்கினி சாட்சி பைரவி, காமாஷி போன்ற படங்களில் பாடல்களை பாடினார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி படகியாக 90ஸ் காலகட்டங்களில் விளங்கினார். ஜதின் லலித், விஜி ஷா, இஸ்மாயில் தர்பார், ஏ ஆர் ரகுமான் என எல்லோருடைய இசையிலும் பாடிவிட்டார்.
குடும்பம் :
கவிதா கிருஷ்ணாமூர்த்தி திருமணமாகி மனைவியை இழந்து மூன்று குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கும் வியலின் வித்வான் டக்கர் எஸ். சுப்பிரமணியம் என்பவரை கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் செய்தி கொண்டார். மேலும் பல பாடல்களை பாடியுள்ள இவருக்கு பிலிம்பேர் சிறந்த பெண் பின்னணி பாடகி விருதும் பெற்றுள்ளார். அதோடு இந்தியாவில் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றார் இவர். இந்த நிலையில் தான் இவர் நேற்று 25ஆம் தேதி ஜனவரி மாதம் தன்னுடைய 65வது பிறந்தநாளை கொண்டாடினார்.