தென்னிந்திய சினிமா திரை உலகில் இயக்குனர் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது ‘பாரதிராஜா’ தான். ஏனென்றால் அவர் அந்த அளவிற்கு சினிமா துறையில் ஆற்றிய படைப்புகளும், சாதனைகளும் எண்ணிலடங்காதவை. மேலும், தமிழ் சினிமா உலகில் பாரதிராஜாவின் காலம் என்று சொன்னாலே அது ஒரு ‘வசந்த காலம்’ தான். மேலும், இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தன்னுடைய திரைப் பயணத்தை எழுபதுகளின் இறுதியில் துவங்கினார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களான ரஜினி, கமல் ஆகிய இருவரை வைத்து ’16 வயதினிலே’ என்ற படத்தை எடுத்து உள்ளார். இந்த படம் அப்போது மெகா ஹிட் படமாக அமைந்தது. மேலும், இந்த படத்திற்கு பிறகுதான் பாரதிராஜா அவர்கள் சினிமா திரையுலகில் உச்சத்திற்கு சென்றார் என்று கூட சொல்லலாம். அப்படி சினிமா துறையில் அசாத்திய இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த பாரதிராஜா அவர்கள் 1977 ஆம் ஆண்டு ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற ஒரு புதிய படத்தையும் இயக்கினார்.
இந்த படத்தில் வசீகர தோற்றம் உடைய இளைஞனை கதாநாயகனாக அறிமுகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். பின் அந்த படத்திற்கு சுதாகரை அறிமுகம் செய்தார். மேலும், அதே படத்தில் கதாநாயகியாக சினிமா துறையில் அடியெடுத்து வைத்தவர் ராதிகா. சுதாகர் அவர்கள் அப்போது பார்த்த தமிழ் சினிமா திரை உலகில் அழகான முகபாவம் கொண்டவர். இவர் தன்னுடைய முதல் படத்திலேயே அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார். அதிலும் கிழக்கே போகும் ரயில் படம் ஹிட்டானதை தொடர்ந்து அவருக்கு பெண்கள் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது என்று கூட சொல்லலாம். இதன் மூலம் இவருக்கு சினிமா துறையில் பல பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. இதனை தொடர்ந்து சுதாகர் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். மேலும், சுதாகர் அவர்கள் பணம், பெயர், புகழ் என அனைத்தும் கிடைத்து உடனே தன்னுடைய மனதை தவறான செயல்களில் திருப்பினார். இவர் பெண் மோகம், குடிபோதை என தீய வழிகளில் கொஞ்சம் கொஞ்சமாக அவரை அறியாமல் செய்து வந்தார்.
இதையும் பாருங்க : நாயகி சீரியல் நடிகையா இப்படி எல்லாம் போஸ் கொடுத்துள்ளார். மேலும், நிஜத்தில் இவர் யார் தெரியுமா ?
இப்படி ஒரு நாள் பெண்களுடன் குடித்துவிட்டு ‘சக்களத்தி’ என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் போதையில் வந்து இருந்தார். அப்போது தான் அவருக்கு சினிமா துறையில் சரிவு ஏற்பட்டது. சினிமா உலகில் பெயர், புகழ் என உச்சத்தில் இருந்த சுதாகருக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். பின் தன்னுடைய ஆந்திராவிற்கு சென்று பட வாய்ப்புகளை தேடத் தொடங்கினார். மேலும், தீய பழக்கத்திற்கு அடிமையானால் அவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. பின்னர் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். அதிலும் பல பிரச்சனைகள் வர தொடங்கிய உடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று கோமாளித்தனம் செய்து நடித்து வந்தார். தற்போது சுதாகருக்கு இருந்த தீய பழக்கத்தினால் தன்னுடைய இரண்டு கிட்னிகளையும் இழந்து உள்ளார். பின் மோசமான நிலையில் உள்ள சுதாகருக்கு தன்னுடைய நெருங்கிய நண்பரான சிரஞ்சீவியால் கூட உதவ முடியாத நிலையில் இருக்கிறார்.
இப்படி இவர் புகழின் உச்சத்தில் இருந்த சுதாகர் இப்படி பரிதாபமான நிலைக்கு செல்வதற்கும் அவருடைய மது மற்றும் மாத தான் என்று தெளிவாக தெரிகிறது. நடிகர் சுதாகர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சில இந்தி படங்களிலும் கூட நடித்துள்ளார். தற்போது 54 வயதான சுதாகர் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்ற தகவல் வெளிவந்துள்ளது. இவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சுதாகர் தீவிர கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தார் . மேலும், இவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் சுயநினைவின்றி கோமா நிலையில் இருக்கிறார் என்றும், ஏற்கனவே அவருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு இருந்து இரண்டு கிட்னிகள் இழந்து உள்ளார் என்ற தகவலும் தெரியவந்தது. இந்நிலையில் டாக்டர்கள் சுதாகரின் மோசமான நிலையை குறித்து 48 மணி நேரத்திற்கு பிறகு தான் எதையும் என்னால் உறுதியாக கூற முடியும் என்று மருத்துவர்கள் அப்போது தெரிவித்தனர். மேலும் சுதாகர் நிலை பரிதாபமாக, மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் பரவியது. ஆனால், அதன் பின்னர் அவர் என்னவானார் என்பதே தெரியவில்லை.