அஜித்தை சார்-னு கூப்பிட சொன்ன அஜித் ரசிகர்.! பங்கமாக கலாய்த்த சித்தார்த்.!

0
924
- Advertisement -

தமிழில் பிரபல நடிகரான சித்தார்த் சமூகவலைதளத்தில் பல முக்கியமான பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தமிழில் ஆயுத எழுத்து, ஜிகர்தண்டா போன்ற பல படங்களில் நடித்த சித்தார்த் தற்போது சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது மும்பை அணி கோப்பையை கைப்பற்ற இதற்கு கேப்டன் ரோகித் சர்மாவின் உழைப்பினை பாராட்டி ட்வீட் செய்திருந்தார் சித்தார்த்.

இதையும் படியுங்க : ட்விட்டரில் உடலை பற்றி விமர்சித்த நபர்.! தந்திரமாக நேரில் வரவழைத்து வெளுத்து வாங்கிய டாப்ஸி.! 

- Advertisement -

இந்த டீவீட்டை கண்ட அஜித் ரசிகர் ஒருவர், ஏங்க பொய் சொல்றீங்க, அவங்க உழைப்பை நம்பியா ஜெயிக்குறாங்க?.. என கூற, அதற்கு சித்தார்த், நீ அஜித்தைமதித்திருந்தால் , உழைப்பை எவ்வாறு மதிப்பது என்பதை கற்று கொண்டிருப்பாய். இல்லை என்றால் அவரை போல ரோல் மாடலாய் நீ வைத்திருப்பது பிரயோஜனம் இல்லை என பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது சித்தார்த்தை மேலும், ஒரு ரசிகர் ஒருவர் அஜித்தை நீங்கள் முதலில் சார் என்று கூப்பிட்டு மரியாதையுடன் பேசுங்கள் என்று ட்வீட் செய்திருந்தார். அதற்கு வடிவேலு பாணியில் ‘ஆஹா’என்று கமெண்ட் செய்துள்ளார். சித்தார்த்தின் இந்த நாட்களுக்கு ரசிகர்கள் பலரும் கொஞ்சம் காண்டாகி உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement