செல்ஃப்பி எடுக்க வந்த சாக்கில் அத்து மீறிய ரசிகர், ஒரு நொடி பதறிப்போன காஜல் அகர்வால் – வைரலாகும் வீடியோ இதோ.

0
145
- Advertisement -

நிகழ்ச்சி ஒன்றில் காஜல் அகர்வாலிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே சினிமா பிரபலங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். பொதுவெளியில் பிரபலங்களை பார்த்தாலே போதுமே ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அவர்களுடன் புகைப்படம், ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைப்பார்கள். அப்படி நடக்கும் போது அந்த இடத்தில் போக்குவரத்து இடஞ்சல், கலவரம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் சில நேரத்தில் நடிகைகளுக்கு பாதுகாப்புமே கிடைக்காமல் போகிறது. ரசிகர்களின் கூட்டத்தால் நடிகைகளிடம் அத்துமீல் செயல்கல்கள் நடந்திருக்கிறது. இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வாலிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை காஜல் அகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்து இருந்தார்.

- Advertisement -

அங்கு அவரை பார்கக ரசிகர்கள் கூட்டம் அதிமாக இருந்தது. பின் காஜலுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அப்போது ரசிகர் ஒருவர் காஜல் அகர்வால் மீது கை போட்டு போட்டோ எடுக்க முயன்று இருக்கிறார். உடனே பதறிப்போன காஜல் அகர்வால் அவரிடம் இருந்து விலகி நின்று என்ன இது? என்று கோபத்தில் கேட்டிருக்கிறார். உடனே அந்த ரசிகரும் தள்ளி சென்று விட்டார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காஜல் திரைப்பயணம்:

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் இருந்தவர் காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதன் பின் 2007 ஆம் ஆண்டு லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா சினிமா பக்கம் காஜல் வந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

-விளம்பரம்-

காஜல் நடித்த படங்கள்:

பின் இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனிடையே காஜல் அவர்கள் மும்பை தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்து 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணம் கொரோனா லாக் டவுனில் நடந்து இருந்ததால் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

காஜல் குறித்த தகவல்:

மேலும், அதோடு திருமணத்திற்கு பின்னும் காஜல் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு தெலுங்கி பாலைய்யா நடிப்பில் வெளிவந்த படத்தில் காஜல் நடித்து இருந்தார். தற்போது இவர் தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “இந்தியன் 2” படத்தில் நடித்து இருக்கிறார். 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் “இந்தியன் 2” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதை அடுத்து வேறு சில படங்களில் காஜல் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Advertisement