‘அப்போ இது ரெண்டும் ஒன்னா’ – Ok கண்மணி தாராவாக மாறிய ஷிவாங்கி, வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
427
- Advertisement -

மக்களின் பேவரட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக சென்று கொண்டு இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப்பில் உள்ளது. இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

போட்டியாளர்கள் சீரிசாக சமைத்துக் கொண்டிருக்கும் போது அவர்களுடன் இருக்கும் கோமாளிகள் காமெடி பண்ணுவது, சொதப்புவது போன்ற வேலைகளை செய்வார்கள். அதே சமயத்தில் அவர்களுக்கு உதவுவது உள்ளிட்ட வேலையும் செய்வார்கள். சில சமயம் நன்றாக வரும் சமையல் கூட கோமாளிகளால் சொதப்பி விடும், சிலது பிரமாதமாக இருக்கும். இதையெல்லாம் தாண்டி தான் போட்டியாளர்கள் தங்கள் திறமையை காட்ட வேண்டும். இது இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட்.

- Advertisement -

இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக நிகழ்ச்சியின் நடுவர்களாக இருக்கும் வெங்கடேஷ் பத் மற்றும் தாமு காமெடி செய்கிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார். மூன்று வருடங்களாக இவர்கள் நிகழ்ச்சியின் நடுவர்கள் மற்றும் தொகுப்பாளர் ஆவார். தற்போது இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த முறை இந்த நிகழ்ச்சியில் குக்குகளாக- அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா, அபி, ராகுல், ரோஷினி, வித்யூலேகா, தர்ஷன் என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதேபோல் கோமாளியாக சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா, குரேஷி, மூக்குத்தி முருகன், பரத்,புகழ் போன்ற பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வழக்கம் போல் தங்களுடைய கோமாளித்தனத்தை அழகாக செய்தீர்கள். ஆனால், இந்த சீசனில் புகழ் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் அடிக்கடி ஸ்பெஷல் கோமாளி போல வந்து செல்கிறார். புகழுக்கு பின்னர் இந்த நிகழ்ச்சி மூலம் அதிகள் பிரபலமடைந்தது ஷிவாங்கி தான்.

புகழை போல இவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. மேலும், விஜய் டிவியும் ஷிவாங்கியை தொடர்ந்து தனியாக ப்ரோமோட் செய்து தான் வருகிறது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் ‘ஹே சினமிகா’ பட ப்ரோமோஷனுக்காக துல்கர் சல்மானும், அதிதி ஹைதாரியும் வந்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோவால் நெட்டிசன்கள் பலரும் காண்டாகி இருக்கின்றனர்.

அதற்கு முக்கிய காரணமே துல்கர் சல்மான் நடித்த ஓ காதல் கண்மணி’ படத்தை இமிட்டே செய்து ஷிவாங்கியை நித்யா மேனன் போல பில்ட்டப் கொடுத்து இருக்கின்றனர். மேலும், துல்கர் சல்மானும் ஷிவாங்கியை நித்யா மேனன் என்று நினைத்து அவருடன் சேர்ந்து நடித்து இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் மணிரத்னம் படத்தை கெடுக்க வேண்டாம் என்றும் ஷிவாங்கியையும் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement