சீரியல் வரலாற்றில் முதல் முறை – விஜய் டிவி சீரியல் ப்ரோமோவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

0
1208
muthazhagu
- Advertisement -

தொலைக்காட்சி என்ற ஒன்று உருவானதிலிருந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் முதலில் குடும்ப இல்லத்தரசிகளின் பேவரட்டாக தான் சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. சமீப காலமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் பார்க்கும் பொழுது போக்கு அம்சமாக சீரியல் மாறிவிட்டது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்புகளை உருவாக்கி வருகிறார்கள். குறிப்பாக கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து அனைவரும் சின்னத்திரை சீரியல் பக்கம் சென்று விட்டார்கள் என்றே சொல்லலாம். இதனால் ஒவ்வொரு சீரியல்களுக்கும் இடையே கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 லிருந்து 15 சீரியல் ஆவது ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. ஆனால், அதில் சில சீரியல்கள் மட்டும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று சீரியலில் புதுமையை கொண்டு வருகிறார்கள். அதில் சில ரசிகர்களிடம் வெற்றி பெறுகிறது. சில தோல்வியடைகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான புதிய சீரியல் தான் முத்தழகு. விவசாயம், கஷ்டப்படும் குடும்பம், ஆனால், தைரியமான கிராமத்துப் பெண். பணக்கார ஹீரோ என்ற கதை களத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

முத்தழகு சீரியல் விமர்சனம்:

ஆரம்பத்தில் இந்த சீரியலின் ப்ரோமோவில் கிராபிக்ஸ் காளை மாட்டை வைத்து விவசாயம் செய்யும் காட்சிகள் வந்து இருந்தது. அப்போது அது சோசியல் மீடியாவில் பயங்கரமாக கிண்டல், கேலி செய்யப்பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இருந்தும் இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு இல்லை என்றாலும் மிகக் குறைந்த அளவிலேயே வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் சீரியலில் ஏதாவது மாற்றம் செய்தால் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனிக்க முடியும் என்று பல கோணங்களில் இயக்குனர் கதையை கொண்டு செல்கிறார். இருந்தாலும் பல முறை இந்த சீரியல் கேலி பொருளாக மாறியுள்ளது.

முத்தழகு சீரியலின் புரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முத்தழகு சீரியலின் புரோமோ சோஷியல் மீடியாவில் பயங்கர கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரியான மாற்றம் சீரியல் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த சீரியலில் தான் நடந்துள்ளது என்றும் கூறுகிறார்கள். அப்படி என்ன நடந்திருக்கிறது என்றால், முத்தழகு சீரியலின் புரோமோவில், வழக்கமான கதையில் வருவதுபோல் விருப்பமில்லாமல் தான் கதையின் நாயகன் நாயகியை திருமணம் செய்துகொள்கிறார்கள். பின் நாட்கள் செல்லச் செல்ல இருவருக்கும் மோதல் காதலாக மாறும். ஆனால், இந்த முத்தழகு சீரியலில் ஒரு படி மேலே போய் வேற மாதிரி இருக்கிறது.

-விளம்பரம்-

கோயிலில் நடக்கும் காட்சிகள்:

இந்த சீரியலில் முத்தழகும், ஹீரோவும் கோயிலுக்கு செல்கிறார்கள். அப்போது சீரியல் வரும் பாட்டி முத்தழகு வரும் வழியில் முல்லை போட்டுவிடுகிறார். இதனால் முத்தழகு காலில் காயம் ஏற்பட்டு அவருக்கு ஹீரோ உதவுவது என்று நினைத்து இதையெல்லாம் செய்கிறார். ஆனால், டைரக்டர் மிகப்பெரிய டீவ்ஸ்ட் வைத்திருப்பது யாராலுமே யோசித்திருக்க முடியாது. அதில் முத்தழகுக்கு பதில் ஹீரோ உடைய காலில் முள் குத்தி விடுகிறது. வழக்கமாக ஹீரோ தான் ஹீரோயினி தூக்கி கோயிலுக்குச் செல்வார்.

விமர்சித்து வரும் நெட்டிசன்கள்:

ஆனால், இந்த சீரியலில் ஹீரோயினி ஹீரோவை தூக்கிக்கொண்டு மலைக் கோயிலுக்கு செல்கிறார். தற்போது இந்த ப்ரோமோ சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்து பலரும் பயங்கரமாக கிண்டல்,ட்ரோல் செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பாட்டி வைத்த முள் மிகவும் லேசாக தான் இருந்தது. முள் குத்தி லேசாக ரத்தம் வருவது போல காட்சிகள் கூட இல்லை. இதற்கு ஏன் இவ்வளவு பில்டப்பு, போதுமடா முடியலடா யப்பா என்று எல்லாம் கிண்டல் செய்து வருகிறார்கள். சீரியல் வரலாற்றிலேயே முதன்முறையாக செய்யப்பட்ட மாற்றம் என்றே சொல்லலாம்.

Advertisement