ஹன்சிகாவிற்கு வில்லனாகும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்.. புகைப்படம் உள்ளே..

0
1665
hansika
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வைத்து எடுக்கப்படும் படங்கள் அதிகமாகி உள்ளனர்.மேலும்,இந்த மாதிரியான படங்கள் மக்களிடையே பாராட்டப்பட்டும் வருகின்றனர். சமீப காலமாகவே தமிழ் சினிமா கதாநாயகிகள் டூயட், சென்டிமென்ட் என்று போகாமல் மாஸ் காட்டும் கதாநாயகிகளாக தெறிக்க விட்டு வராங்க. அந்த வரிசையில் விஜயசாந்தி, நயன்தாரா, ஜோதிகா,திரிஷா,டாப்சி என இவர்களை தொடர்ந்து தற்போது ஹன்சிகாவும் களமிறங்கி உள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி உள்ளது.சினிமா துறையில் இருந்து ஹன்சிகா சில நாட்கள் சில இடைவெளி எடுத்துக்கொண்டு நல்ல படத்தின் கதைக்காக காத்து கொண்டிருந்தார்.அதற்கான வாய்ப்பும் கிடைத்தது என்று கூட சொல்லலாம்.

-விளம்பரம்-
Image result for hansika simbu in maha

தற்போது ஹன்சிகா ” மகா” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். மேலும், இந்த படத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு அவர்களும் நடிக்கிறார்.இதனை தொடர்ந்து இந்த படத்தில் வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் ‘ஸ்ரீசாந்த்’ அவர்களும் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.இந்த படம் திகில், காமெடி, பேய் மற்றும் குடும்ப சென்டிமென்ட் என அனைத்து விஷயங்களையும் கொண்டிருக்கும் படமாக இருக்கும் என கூறினார்கள்.இந்த படத்தில் சிம்பு, ஸ்ரீசாந்த், தம்பி ராமையா, கருணாகரன் என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.அம்புலி,ஜம்புலிங்கம் போன்ற படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஹரி ஹரீஷ் அவர்கள்தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார்கள்இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படத்தின் மூலம் ஹன்சிகா புகழின் உச்சத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பாருங்க : சினிமா நடிகைகளை போல ஓபன் உடையில் விருது விழாவிகற்கு வந்த யாரடி நீ மோகினி சீரியல் நடிகை..

- Advertisement -

இந்தப்படம் ஹன்சிகாவுக்கு மட்டுமல்ல ஸ்ரீசாந்த் வாழ்க்கையில் கூட ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹன்சிகா அவர்கள் சுந்தர். சியின் அரண்மனை படத்திற்கு பிறகு மீண்டும் பேய் படங்களில் நடிக்க உள்ளார். இந்த படத்தை யோகிபாபு நடித்து வெளிவந்த தர்ம பிரபு படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறார்கள்.பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அவர்கள் ஏற்கனவே ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். ஆனால்,ஸ்ரீசாந்த்க்கு தமிழில் இது தான் முதல் படம் என்று சொல்லலாம். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரொம்ப கொடூரமாகவும், பயங்கரமாகவும் இருக்கும் என கூறியுள்ளார்கள்.

Image

இதைக்கேட்டு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்கள் எனவும் தெரியவந்தது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் அதாவது டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என்றும் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை திரையரங்கில் வெளியிடப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்தார்கள். ஹன்சிகா, ஸ்ரீசாந்த், சிம்பு இவர்கள் மூன்று பேரும் இணைந்து நடிக்கும் இந்த படம் குறித்து பல எதிர்பார்ப்புகளுடனும், ஆவலுடனும், உள்ளனர் ரசிகர்கள். அது மட்டுமில்லாமல் ஹன்சிகா மோத்வானி அவர்கள் தெனாலி ராமான்கிருஷ்ணா பி.ஏ.பி.எல் என்ற ஒரு தெலுங்கு படத்திலும், பார்ட்னர் கல்யாணியின் தலைப்பு வைக்கப்படாத தமிழ் படத்திலும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இது மட்டும் இல்லைங்க இந்த ஹாரர் படத்தை 3டி தொழில்நுட்பம் மூலம் உருவாக்க திட்டமிட்டு உள்ளனர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.சினிமா துறையில் சில ஹீரோயின்கள் மட்டும்தான் 50 படங்களை தாண்டி நடித்துள்ளனர் அந்த வரிசையில் தற்போது ஹன்சிகாவும் உள்ளார். இவர் தளபதி விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார்

Advertisement