சினிமா நடிகைகளை போல ஓபன் உடையில் விருது விழாவிகற்கு வந்த யாரடி நீ மோகினி சீரியல் நடிகை..

0
144972
chaitra-reddy
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை கொண்டுவர தொலை காட்சிகள் அனைத்தும் மூலமாக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது அந்த வகையில் தற்போது தொலைக்காட்சி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து வருவது ஜீ தமிழ் தொலைக்காட்சி தான் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இன்றைய தேதியில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது, ‘யாரடி நீ மோகினி’.

-விளம்பரம்-

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பிரான நந்தினி சீரியலுக்கு பிறகு தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் அதிக பட்ஜெட்டை கொண்டு உருவான சீரியல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் சஞ்சீவ் ஹீரோவாக நடிக்க, வில்லிகளாக பாத்திமா பாபு, சைத்ரா ரெட்டி இருவரும் நடித்தன. ஆரம்பத்தில் இந்த சீரியலில் சஞ்சீவ் நடித்து வந்தார். அதன் பின்னர் அவர் நீக்கப்பட்டு தற்போது பிரபல சீரியல் நடிகரான ஸ்ரீகணேஷ் நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது 700 எபிசோடுகளுக்கு மேல் கடந்துள்ளது. இதில் சைத்ரா ரெட்டியின் பெர்ஃபாமன்ஸ் காரணமாகவே இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நம்பர் ஒன் இடத்திலிருப்பதாக அவரது ரசிகர்கள் பெருமிதம் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : கிளைமாக்ஸ் சரியில்லை என்று விஜய் விலகிய படம்.. போட்டோ ஷூட்டுடன் இதோ..

- Advertisement -

இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி சமீபத்தில் ‘ஜீ குடும்ப விருதுகள்’ என்ற விருது வழங்கும் விழாவை நடத்தி இருந்தது. இந்த விழாவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு விருதுகளும், அந்த சீரியலில் நடித்து வரும் சிறந்த நடிகர் நடிகைகள், துணை நடிகர்கள், என்று அனைவருக்கும் விருதினை அளித்தனர். இந்த விருது வழங்கும் விழாவில் பல்வேறு ஜீ தமிழ் நடிகர் நடிகைகள் வித்யாசமான ஆடைகளில் வந்து அசத்தினார். ஆனால், சைத்ரா ரெட்டி அணிந்து வந்த ஆடையை கண்டு அனைவரும் கொஞ்சம் ஷாக்காகி போயினர்.

காரணம் அம்மணி, அந்த அளவிற்கு முன்னழகு தெரியும்படி கவர்ச்சியான ஆடையில் வந்திருந்தார். மேலும், இந்த விழாவிற்கு வந்த விஜய் சேதுபதியுடனும் புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொதுவாக சினிமா நடிகைகள் தான் இப்படி ஆடை அணிவது வழக்கம். ஆனால், சீரியல் நடிகையே இப்படி ஆடை அணிவதை கண்டு ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர் . அதே போல சைத்ரா ரெட்டிக்கும் இது போன்ற சச்சைகள் எல்லாம் புதிதான ஒன்றல்ல. ஆந்திராவில் பிறந்த இவர் கன்னட சினிமாவில் பல படங்களில் கதாநாயகியகவும்,வில்லியாகவும் நடித்தார்.

-விளம்பரம்-
chitra

பின்னர் பட வாய்ப்புகள் குறையவே கன்னட மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலாஜி போத்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் சைத்ரா ரெட்டி. திருமணத்திற்கு பின்னர் 12 ஆண்டுகள் சந்தோசமாக வாழ்ந்துவந்தார் சைத்ரா ரேடிய. ஆனால், தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு உள்ளதாகவும். இதனால் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாகவும் போலீஸிடம் புகார் ஒன்றைஅளித்திருந்தார். மேலும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கூறி புவனேஷ்வர் போலீசாரிடம் புகார்அளித்திருந்தார். இதனையடுத்து புவனேஷ்வர் போலீசார் பாலாஜி போத்ரா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement