பொதுவாக இறப்பது போல ஷாட் எடுத்தால் பின்னர் சிரிப்பது போல ஒரு ஷாட் எடுப்பார்கள் ஏன் தெரியுமா – காயத்ரி சொன்ன சீக்ரெட்.

0
411
gayathri
- Advertisement -

100வது நாள் கொண்டாட்டத்தை ஒட்டி விக்ரம் பட அனுபவம் குறித்து நடிகை காயத்ரி பகிர்ந்து இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருந்த விக்ரம் படம் மெகா ஹிட் அடித்தது. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருந்ததால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருந்தார்கள்.

- Advertisement -

விக்ரம் படம் :

மேலும், விக்ரம் படம் உலகம் முழுவதும் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு விக்ரம் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் கமலின் மார்க்கெட் உயர்ந்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் இயக்கம் தான். விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜூக்கு கார் ஒன்றை பரிசாக அளித்து இருந்தார் கமல். இந்த படம் உலக அளவில் 450 கோடிக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்திருக்கிறது.

100வது நாள் கொண்டாட்டம்:

இந்த படத்தின் அடுத்த பாகம் வரும் என்று ஆவலுடன் ரசிகர்கள் இருக்கிறார்கள். பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி இருக்கின்றனர். மேலும், இந்த படம் ஓடிடியில் வெளியாகி சாதனை படைத்து வந்தாலும் இன்னும் கூட சில திரையரங்கில் படம் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. விக்ரம் படம் வெளியாகி இன்றோடு 100 நாட்கள் கடந்து விட்டது. 100வது நாள் கொண்டாட்டத்தை ஒட்டி நடிகர் கமலஹாசன் அவர்கள் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

கமல் பதிவிட்ட வீடியோ:

அதில், ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் நூறாவது நாள் எட்டிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன் என்று கமலஹாசன் அவர்கள் உணர்ச்சி பூர்வமாக பேசியிருக்கிறார். இந்த நிலையில் விக்ரம் படத்தின் 100வது நாள் கொண்டாட்டத்தை ஒட்டி நடிகை காயத்ரி அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், பொதுவாக ஒரு படத்தில் ஒரு நடிகர் இறந்துவிட்டது போல நடித்தால் கண் விழித்து எழுந்து சிரிப்பது போன்ற காட்சியையும் சேர்த்து கூடுதலாக எடுப்பது வழக்கம்.

காயத்ரி பதிவிட்ட பதிவு:

காரணம் அந்த நடிகர் உயிருடன் உள்ளார். இது வெறும் நடிப்புதான் என்பதை உலகிற்கு சொல்வதற்காக இவ்வாறு செய்யப்படும். விக்ரம் படத்தில் நான் இறந்த காட்சியை படமாக்கிய போது அப்படி ஒரு கூடுதல் காட்சி எடுக்க மறந்துவிட்டோம். காரணம் நேரம் இல்லாதது தான். புதுமையாக செய்வதற்காக ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டோம். எல்லோரும் உங்க தலை எங்கே? என கேட்கிறார்கள் இதோ பாருங்க என்று விக்ரம் பட புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் காயத்ரி. தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது

Advertisement