தமிழகமா? தமிழ் நாடா? பார்த்து விடலாம்! பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விடுத்த காயத்ரி ரகுராம்.

0
459
- Advertisement -

தமிழக பாஜகவில் தமிழ் வளர்ச்சி துறை தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் சமீபத்தில் பாஜகவை விட்டு வெளியேறிய நிலையில் நேரடியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விட்டுள்ளார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாஜக கட்சியில் கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வந்தவர் காயத்ரி ரகுராம். இவர் தமிழ் நாடு மற்றும் அயல்நாட்டு தமிழ் வளர்ச்சி துறையில் தலைவராக இருந்து இவர் பாஜக கட்சியில் சேர்ந்ததில் இருந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வருகிறார்.

-விளம்பரம்-

குறிப்பாக காயதிரி ரகுராம் ஒவ்வொரு முறை உயர் பதவி பெரும் போதும் இவரது பெயர் அடிப்பட்டு விமரிசிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான சூர்யா – டெய்சி அடியோவினாலும் அலிஷா விவரகத்தினாலும் தற்க்கலிகமாக நீக்கப்பட்ட காயதிரி ரகுராம் கடந்த சில நாட்களுக்கும் முன்னர் முழுமையாக கட்சியில் இருந்து வெளியேறினார். இவர் வெளியேறியதில் இருந்து பல்வேறு செய்தி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

- Advertisement -

திருச்சி சூர்யா விவகாரம் :

இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது `கடந்த 2 மாதங்களாக பாஜகவில் பிரச்னை நடந்து வருகிறது. தமிழக பாஜக தலைவர் எந்த விதத்தில் பெண்களுக்கு ஆதரவாக இருக்கிறார். திருச்சி சூர்யா மற்றும் டெய்சி விவகாரத்தில் சூர்யாவை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கினார். இதனையடுத்து சூர்யா கட்சியில் இருந்து விலகிய நிலையில் அவரது விலகலை ஏன் அண்ணாமலை ஏற்கவில்லை . அவர் தவறு செய்த்தவர் என்று தெரிந்தும் ஏன் எதையும் செய்யவில்லை. அதே போல நடிகை அலீஷுவும் சூர்யா தான்னை ஆபாசமாக கூறியதாக அதே நேரத்தில்தான் கூறியிருந்தார்.

தைரியம் இருக்கிறதா ? :

மேலும் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை பெண்களிடத்தில் தோற்று விட்டார். திருச்சி சூர்யா பிரச்சனையில் ராஜினாமாவை அண்ணாமலை ஏற்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர் அண்ணாமலை மீது பல குற்றசாட்டுகளை முன்வைத்தார். மேலும் சமீபத்தில் காயதிரி ரகுராம் போட்டிருந்த ட்விட்டர் பதிவில் நான் அண்ணாமலையுடன் நேர்காணலில் பேச வேண்டும். அவருக்கு என்னிடம் பேச தைரியம் இருக்கிறதா? என்று பதிவிட்டிருந்தார் காயதிரி ரகுராம்.

-விளம்பரம்-

அண்ணாமலைக்கு உண்மை தெரியாது :

இந்த நிலையில் இதற்கு முன்னர் காயதிரி ரகுராமை பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்திருக்கும் போது செய்தியாளர்களிடம் `நான் என்ன தவறு செய்தேன் என்று சொல்லுங்கள் எந்த விதத்தில் நான் கட்சிக்கு களங்கம் விளைவித்தேன் என்று எனக் கூறினார். மேலும் என்ன தவறு செய்தேன் என ஆதாரங்களுடன் காட்டுங்கள் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை ஆதாரங்கள் இல்லாமல் தான் பேசுவார், அதுதான் உண்மை என்று செய்தியாளர்களிடம் போட்டி கொடுத்திருந்தார்.

தமிழகமா? தமிழ் நாடா? :

இப்படிபட்ட நிலையில் தான் பாஜக தலைவர் அண்ணாமலையை எதிர்த்து ஈரோடு தேர்தலில் போட்டியிட இருப்பதாக காயதிரி ரகுராம் கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் போட்டிருந்த பதிவில் ” ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலையுடன் போட்டியிட சவால் விடுகிறேன். உங்களின் போலி நாடகங்கள் விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். ஒருவேளை இந்த தேர்தலில் நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி தேர்தலை மாற்றலாம்.

நான் தமிழ் நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா? தமிழ்நாடா? என்று பார்த்து விடலாம் என்று அந்த ட்விட்டர் பதிவின் மூலம் அண்ணாமலைக்கு நேரடி சவால் விடுத்திருந்தார் காயதிரி ரகுராம்

Advertisement