இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த கில்லி திரைப்படம் தற்போதும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இருக்கிறது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த ஒக்கடு என்ற படத்தின் ரீமேக் தான் கில்லி. நடிகர் விஜய்யின் கேரியரில் மிகப்பெரிய ஹிட் ஆன படம் கில்லி. இந்த படத்தில் த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.இது கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆக்ஷன் படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் விறுவிறுப்பாகவும், ரசிகர்கள் மனதில் இன்றளவும் மறக்காமல் உள்ளது. மேலும், இந்த படம் 50 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது.
இந்நிலையில் இந்த கில்லி படம் சன் டிவியில் சில நாட்களுக்கு முன்பு தான் ஒளிபரப்பானது. படம் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே விஜய் ரசிகர்கள் கில்லி என்ற ஹஷ்டாக்கை உருவாக்கி சோசியல் மீடியாவில் இந்திய அளவில் டிரெண்டாகி விட்டனர். இந்த படத்திற்கு 16 வருடங்கள் கழித்தும் மக்கள் மத்தியில் இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
இதையும் பாருங்க : புத்தகத்திற்கு மரியாதை கொடுங்க. அஜித் பட நடிகை வெளியிட்ட வீடியோ. கழுவி ஊற்றிய ரசிகர்கள்.
இது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. இந்த அளவுக்கு கில்லி படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருப்பது மிகப்பெரிய விஷயம். இந்நிலையில் கில்லி திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது சியான் விக்ரம் தான் என்று கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் அவர்கள் சமீபத்தில் நடந்த பேட்டியில் கூறியுள்ளார்.
தற்போது இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் கூறியிருப்பது, கில்லி படம் இன்னைக்கு வரைக்கும் யாராலும் மறக்க முடியாத படமாக உள்ளது. முதலில் கில்லி படத்தில் ஹீரோவாக நடிக்க விக்ரம் இடம் தான் பேசப்பட்டது. அந்த சமயத்தில் விக்ரம் அவர்கள் பிசியாக இருந்ததால் கில்லி படம் அவர் கையை விட்டு நழுவி சென்றது.
அதற்கு பின் தான் தளபதி விஜய் இந்த படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் தரணி முடிவு செய்தார் தரணி. அதோடு தூள் படத்தில் முதலில் விஜய் தான் நடிக்கவிருந்தார். சில காரணங்களால் அந்த வாய்ப்பு விக்ரமுக்கு சென்றது. விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் அனைத்து ஷாட்களையும் ஒரே டேக்கில் ஓகே செய்துவிடுவார். இந்த படத்திற்காக சுத்தமாக மேக்கப் எதுவும் போடாமல் தான் விஜய் படம் முழுக்க நடித்தார்.
மேலும், சில காட்சிகளில் உடலில் மண்ணை பூசிக்கொண்டு கூட நடித்தார். ரீமேக் படம் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தவாறு விறுவிறுப்பான காட்சிகளை அமைத்த பட்டைய கிளப்பினார் இயக்குனர் தரணி என கோபிநாத் கூறியுள்ளார். கில்லி, குருவி, வேட்டைக்காரன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக கோபிநாத் தான் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் கோபிநாத் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். தில், கில்லி,தூள், தடம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் பணி புரிந்து உள்ளார்.