Updated · 27 மே, 2026 அன்று 12:07 AM1 நிமிட வாசிப்பு
முழு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தை சேர்ந்த மாணவி ரங்கீலா கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான பொது தேர்வில் 1058 மதிப்பெண் எடுத்து சிறந்த முறையில் தேர்ச்சிபெற்றார். இதனை அடுத்து கலந்தாய்வு மூலம் அவர் ஒரு தனியார் கல்லூரியில் ஆயுர்வேத மருத்துவம் படிக்க தொடங்கிறார்.
முதல் வருடம், மிகுந்த கஷ்டங்களுக்கு பிறகு கல்லுரி கட்டணத்தை செலுத்தினார். அதன் பிறகு அடுத்த ஆண்டிற்கான கல்லுரி கட்டணத்தை ஏற்க முன்வந்தனர் அரியலூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர். அனால் சோகம் என்ன வென்றால் அவர்கள் அந்த மாணவியின் கல்லுரி கட்டணத்தை இதுவரை செலுத்தவில்லை. இதனால் அந்த கல்லூரி நிர்வாகம் அந்த மாணவியை வீட்டிற்கு அனுப்பிவிட்டது. கடந்த மூன்று வாரங்களாக அந்த மாணவி வீட்டில் தான் இருக்கிறார். மனைவி ரங்கீலாவிற்கு உதவியது போல புகை படங்கள் எடுத்து அதை நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர் மன்றத்திரனார் அனுப்பி வைத்ததாக குற்றம் சாட்ட படுகிறது.
Tamil Selvam is a Political Writer at Behind Talkies with over four years of experience covering politics, governance, public policy, elections, and current affairs. He specializes in reporting and analyzing political developments, government initiatives, and issues that impact society. Through accurate and engaging journalism, he aims to provide readers with clear insights into the evolving political landscape and public affairs.