ஈஸ்வரியால் மீண்டும் வீட்டுக்கு வர இருக்கும் கோபி – பாக்கியலட்சுமி எடுத்த விபரீத முடிவு. பாக்கியலட்சுமி சீரியலில்

0
302
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் கோபி பாக்கியாவின் வீட்டிற்கு வரும் புதிய எபிசோட் குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் தற்போது டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

சீரியலில் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் கேண்டினில் சில பிரச்சினை வந்ததால் இங்கிலீஷ் கிளாசை விட்டு விடுகிறார். அதன் பின் ராதிகா கேண்டின் ஆர்டரை கேன்சல் செய்து விடுகிறார். இதனால் பாக்கியா மனம் நொந்து போகிறார். பின் போராடி வேறு ஏதாவது கேண்டின் ஆர்டர் கிடைக்க கடுமையாக உழைக்கிறார். இன்னொரு பக்கம் அமிர்தாவின் முதல் கணவர் உயிருடன் வருகிறார்.

சீரியலின் கதை:

அமிர்தா ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார். இவருடைய கணவர் கணேஷ் ஒரு விபத்தில் இறந்து விடுகிறார். இதை தெரிந்தும் எழில் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.
இப்படி இருக்கும் நிலையில் அமிர்தாவின் முதல் கணவர் உயிருடன் திரும்பி வருகிறார். இதை பார்த்து கணேசன் பெற்றோர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். பின் கணேஷ், அமிர்தா எங்கே இருக்கிறார்கள். கேட்கிறார். என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக நிற்கிறார்கள். ஒரு வழியாக அமிர்தாவையும் தன் குழந்தையும் கையோடு அழைத்துச் செல்ல கணேஷ் முயற்சிக்கிறார்.

-விளம்பரம்-

மருத்துவமனையில் கோபி:

பின் இந்த உண்மை எல்லாம் கணேஷ் அப்பா அம்மா பாக்யாவிடம் சொல்கிறார்கள். பாக்கியாவும் என்ன செய்வது என்று புரியாமல் அதிர்ச்சியில் இருக்கிறார். இதற்கு முன் ஜெனிக்கு நல்லபடியாக குழந்தை பிறந்து எல்லோரும் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். செழியன் தான் செய்த தவறை உணர்ந்து ஜெனி இடமும் குழந்தை இடமும் அன்பாக நடக்கிறார். ஆனால், செழியினை எப்படியாவது அடைய வேண்டும் என்று அவருடைய கம்பெனி ஓனர் நினைக்கிறார். இன்னொரு பக்கம் கோபி கடன் மேல் கடன் வாங்கி அதை அடைக்க முடியாமல் தவிக்கிறார். அப்போது பார்த்து ராதிகா தன்னுடைய அம்மாவின் பிறந்த நாளிற்கு 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை வாங்கி தர வேண்டும் என்று சொல்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

இதை கேட்டு கோபி மயக்கம் அடைந்து விடுகிறார். பின் அவரை ஹாஸ்பிடலில் சேர்க்கிறார்கள். மருத்துவர் ஒன்றும் இல்லை என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள். இதை அறிந்த ஈஸ்வரி, கோபியை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று ராதிகாவிடம் சண்டை போடுகிறார். பின் எப்படியோ பேசி கோபியை ஈஸ்வரி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வருகிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவருமே அதிர்ச்சியில் இருக்கிறார்கள். உண்மையாலுமே கோபி பாக்கியா வீட்டிற்கு வந்து விடுகிறாரா? இல்லை பாக்கியா வீட்டை விட்டு வெளியேறுவாரா? ராதிகாவின் முடிவு என்ன? ராதிகா கோபியை வீட்டிற்குள் அனுமதிப்பாரா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

Advertisement