நயன் நடித்த அறம் பட இயக்குனர் மீது வெளிநாட்டு பெண் அளித்த பரபரப்பு புகார் – இயக்குனர் கொடுத்த விளக்கம்

0
1683
- Advertisement -

நயன்தாரா பட இயக்குனர் மீது பிரான்ஸ் நாட்டு பெண் அளித்திருக்கும் மோசடி புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென்னிந்திய சினிமாவுலகில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருப்பவர் நயன்தாரா. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று இருகிறது. அந்த வகையில் நயன்தாராவின் வெற்றி படங்களில் ஒன்று அறம்.

-விளம்பரம்-

இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் கோபி நயினார்.
இந்த நிலையில் அறம் படத்தின் இயக்குனர் கோபி நாயனார் மீது இலங்கை பெண் மோசடி புகார் அளித்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, இலங்கையை சேர்ந்த பெண் சியாமளா யோகராஜா. இவர் தொழிலதிபர். இவர் தற்போது சென்னை போலீசில் கமிஷனர் அலுவலகத்தில் அறம் பட இயக்குனர் கோபி நயினார் மீது புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

சியாமளா யோகராஜா அளித்த புகார்:

அதில் அவர், நான் இலங்கையைச் சேர்ந்தவள். தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறேன். நடிகை நயன்தாரா நடித்து இருந்த அறம் படத்தின் இயக்குனர் கோபி நயினார், புதிதாக நடிகர் ஜெய் நடிப்பில் ‘கருப்பர் நகரம்’ என்ற பெயரில் படம் எடுக்கப்போவதாக சொன்னார். எனக்கு தெரிந்த பட அதிபர் ஒருவரும் அதை உறுதி செய்தார். அந்த படத்தில் என்னையும் தயாரிப்பாளராக இணைத்து கொள்வதாகவும், படத்திற்கு கிடைக்கும் லாபத்தில் 25 சதவீதம் எனக்கு தருவதாகவும் சொன்னார்கள். அதை நம்பி சென்னை வந்த நான் 30 லட்சம் ரூபாயை முன்பணமாக கொடுத்தேன்.

கோபி நயினார் மீது எழுந்த குற்றச்சாட்டு:

புதிய படத்திற்கு பூஜை போட்டார்கள். அந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொண்டேன். அதன்பிறகு பிரான்ஸ் போய் விட்டேன். ஆனால், திடீரென்று படத்தை நிறுத்தி விட்டதாக சொன்னார்கள். நான் கொடுத்த.பணத்தை திருப்பி கேட்டேன். அதனால் என்னுடன் செல்போனில் பேசுவதை நிறுத்தி விட்டனர். எனவே எனக்கு தர வேண்டிய 30 லட்சத்தையும் மோசடி செய்து விட்டனர். அந்த பணத்தை சட்டப்படியான நடவடிக்கை எடுத்து வசூல் செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

கோபி நயினார் அளித்த புகார்:

இதனை அடுத்து பிரான்ஸ் நாட்டு பெண் மீது இயக்குனர் கோபி நாயனார் புகார் அளித்திருக்கிறார். அதில் அவர், கங்காதரன் மற்றும் விஜய் அமிர்தராஜ் ஆகியோர் தயாரிப்பில் என் சொந்த கதையை ‘கறுப்பர் நகரம்’ என்ற பெயரில.திரைப்படமாக இயக்கி வருகிறேன். கங்காதரனிடமிருந்து படம் தயாரிப்பு உரிமையை ஹனீஸ் என்பவர் வாங்கினார். இவருடன் விஜய் அமிர்தராஜ் இணை தயாரிப்பாளராக இருக்கிறார். இயக்குனர் என்ற முறையில் பட தயாரிப்பு அலுவலகத்திற்கு சென்ற போது பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சியாமளா யோகராஜா என்பவரை விஜய் அமிர்தராஜ் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

சியாமளா மீது புகார்:

அப்போது தன் தம்பிக்கு நடிக்க வாய்ப்பு அளிக்குமாறு சியாமளா யோகராஜா என்னிடம் கேட்டார். அப்போது என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பின் எங்களுக்குள் எந்தவித கொடுக்கல் வாங்கலும் இல்லை. ‘கறுப்பர் நகரம்’ திரைப்படம் இதுவரை நான் தயாரிப்பாளர்களுக்கு கைமாறியுள்ளது. தயாரிப்பாளர்கள் யாரிடம் பணம் வாங்குகிறார்கள் என்பது எனக்கு தெரியாது. இந்நிலையில் நான் பண மோசடி செய்து விட்டதாகவும், என் இயக்கத்தில் படம் தயாரிக்க சில தயாரிப்பாளர்கள் தயங்குவதாகவும் இன்னும் பல பொய் புகார்களைக் கூறி, என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதுாறு பரப்பி வருகிறார். சியாமளா யோகராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement