திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் ப்ரியாமணி. தெலுங்கு திரையுலகில் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘எவரே அதகாடு’. இந்த படத்தினை இயக்குநர் பி. பானு ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக வல்லபா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ப்ரியாமணி நடித்திருந்தார். இது தான் நடிகை ப்ரியாமணி ஹீரோயினாக அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம்.
இதனைத் தொடர்ந்து ப்ரித்விராஜின் ‘சத்யம்’ என்ற மலையாள படத்தில் நடித்தார் ப்ரியாமணி. அதன் பிறகு தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை ப்ரியாமணி, அடுத்ததாக தமிழ் திரையுலகிலும் நுழையலாம் என முடிவெடுத்தார். 2004-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘கண்களால் கைது செய்’.இது தான் நடிகை ப்ரியாமணி தமிழ் சினிமாவில் என்ட்ரியான முதல் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர்பாரதிராஜா இயக்கியிருந்தார்.
இதில் கதையின் நாயகனாக வசீகரன் என்பவர் நடித்திருந்தார். ‘கண்களால் கைது செய்’ படத்துக்கு பிறகு ‘அது ஒரு கனாக்காலம், மது, பருத்தி வீரன், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா’ என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார் ப்ரியாமணி.தெலுங்கு, மலையாளம், தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் ப்ரியாமணி. ஹிந்தி திரையுலகில் 2013-ஆம் ஆண்டு வெளி வந்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திலும் நடித்து இருந்தார்.
பிரியா மணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் பிரியா மணி கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். இதை பார்த்த ரசிகர் ஒருவர், என்னை திருமணம் செய்துகொள்வீயா என்று கேட்க, இதற்கு பதில் அளித்த பிரியா மணி, எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால், என் கணவருடம் அனுமதி கேளுங்க. அவர் சம்மதம் சொன்னா நான் உங்களை கல்யாணம் பணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.