அஸ்தி கரைக்கும் போதும் என் புள்ள அப்படி கேட்டா – கணவர் இறப்பிற்கு பின் ஹரி வைரவன் மனைவி அளித்த முதல் பேட்டி.

0
592
hari
- Advertisement -

வெண்ணிலா கபடிகுழு திரைப்பட நடிகரான ஹரி பைரவன் வெகு நாளாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி இரவு 12 மணியளவில் காலமாகினார். இவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வரும் நிலையில் இணையத்தில் பொய் செய்தி பரப்பிய ஊடகத்தின் மீது கடுமையான கண்டனங்களை வைத்துள்ளார் நடிகர் ஹரி பைரவரின் மனைவியான கவிதா. இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் வெண்ணிலா கபடிகுழு . இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். 

-விளம்பரம்-

படத்தில் இந்த படத்தின் மூலம் தான் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஹரி வைரவன். இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் போன்ற சில படங்களில்நடித்திருந்தார். அதற்குப்பிறகு இவர் என்ன ஆனார்? என்றே தெரியவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல யூடுப் சேனல் நடிகர் ஹரி வைரவனின் நிலை குறித்து பேட்டி ஒன்று எடுத்து இருந்தார்கள்.

- Advertisement -

அதில் அவருடைய மனைவி எடுத்து வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர் என்னுடைய கணவர் ஹரி. எங்களுக்கு அரேன்ஜ் மேரேஜ் தான் நடந்தது. நன்றாகத்தான் எங்களுடைய வாழ்க்கை இருந்தது. என் கணவர் ஹரி என்னை நன்றாக தான் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஒருநாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். பலரும் அவர் இறந்துவிட்டார் என்று கூறினார்கள்.

நடிகர் ஹரி நிலை குறித்து மனைவி அளித்த பேட்டி:

இருந்தாலும் என்னுடைய நம்பிக்கையை விடாமல் நான் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். அப்போது மருத்துவர்கள் அவரை பரிசோதித்து சென்றேன். ஸ்டேஜில் இருக்கிறார் என்று சொல்லி விட்டார்கள். எனக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை? பின் நான் அவர் அருகில் உட்கார்ந்து தினமும் நடக்கும் நிகழ்ச்சிகளையும், பழைய நிகழ்ச்சிகளையும் அவரிடம் பேசிக் கொண்டே இருப்பேன். இருந்தும் அவர் 15 நாட்கள் கோமாவில் இருந்தார். அதற்கு பிறகு தான் அவர் மெல்ல மெல்ல சுயநினைவுக்கு வந்தார். அதோடு அவருக்கு ஏற்கனவே சர்க்கரை வியாதி இருந்தது. அதனால் அவர் கை,கால் எல்லாம் வீங்கி போனது என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார் கவிதா.

-விளம்பரம்-

தவறான செய்தி பரப்பிய யூடியூப் சேனல் :

இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி உடல் நலக்குறைவின் காரணமாக நடிகர் பைரவன் காலமானார். அவரது மரணத்திற்கு அவருடன் பாடங்களில் நடித்த அப்புக்குட்டி, சூரி, விஷ்ணு போன்ற பல நடிகரகள் தங்களுடைய இரங்கல் தெரிவித்திருந்தனர். அதோடு நடிகர் விஷ்ணு ஹரி குழந்தையின் முழு படிப்புச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இப்படடிப்பட்ட நிலையில்தான் நடிகர் ஹரி வயிறு வெடித்து இறந்து விட்டார் என தவறான செய்தியை ஒரு யூடியூப் சேனல் வீடியோவாக பதிவிட்டிருந்தது.

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா :

இதனை பார்த்த நடிகர் ஹரியின் மனைவியான கவிதாவிற்கு பெரும் அதிர்ச்சி ஏற்ப்பட்டது. ஏற்கனவே தன்னுடன் இருந்த கணவர் மறைந்த சோகத்திலிருந்து வெளிவராத அவரது மனைவியை இந்த செய்தி மேலும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியது. இந்நிலையில் ஒரு செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த கவிதா கூறியதாவது `ஒரு மனசாட்சியே இல்லாமல் என்னுடை கணவரை பற்றி தவறாக செய்தி பரப்பிய யூடியூப் சேனல் ஏன் அப்படி செய்தார்கள் என்று தனக்கு தெரியவேண்டும் என அழுதபடி கூறியிருந்தார்.

நீதிமன்றத்தில் புகார் அளிப்பேன் :

மேலும் நான் உங்களுடைய சேனலுக்கு பேட்டியளிக்கவும் இல்லை, அதோடு நான் உங்களிடம் அப்படி ஒரு செய்தியை போட சொல்லவும் இல்லை. இப்படியிருக்கும் போது ஏன்? என்னுடைய கணவரை பற்றி தவறான செய்தி பரப்பிணீர்கள். அந்த தவறான செய்திக்கு எனக்கு உங்களிடம் இருந்து சரியான விளக்கம் கிடைக்கவில்லை என்றால் நான் நீதிமன்றத்தில் புகார் அளிப்பேன் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் கவிதா இப்படி பேசிய வீடியோ வைரலாகவே நடிகர் ஹரியை பற்றி தவறான செய்தி பரப்பிய யூடியூப் சேனல் மீது கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement