“எந்த அரசாங்கமாக இருக்கட்டும், தைரியமாகப் பேசுபவர் விஜய் சேதுபதி” – தி.மு.க அமைச்சர் புகழாரம்.

0
436
vijaysethupathi
- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. அதோடு இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பால் அபார வளர்ச்சி அடைந்தவர் விஜய்சேதுபதி. ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் தற்போது முன்னணி நடிகராக மிரட்டி கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-
Vijaysethupathi

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் என்ற தேசிய விருது வழங்கப்பட்டு இருந்தது. அதுவும் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு வாரத்தில் மட்டும் விஜய்சேதுபதி நடிப்பில் 4 படங்கள் வெளியாகி இருந்தது. அதுவும் ஒரே நாளில் இரண்டு படங்கள் கூட வெளிவந்து இருந்தது. கடந்த ஆண்டு மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் லாபம். இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் சொல்லணும்.

- Advertisement -

விஜய் சேதுபதியின் திரைப்பயணம்:

பின் விஜய் சேதுபதி நடிப்பில் டெல்லி பிரசாத் தீன தயாளன் இயக்கத்தில் உருவான துக்ளக் தர்பார் திரைப்படத்தை சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார்கள். அதேநாளில் நெட்பிளிக்ஸ் வலைத்தளத்திலும் இந்த திரைப்படம் வெளியானது. மேலும், மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கடைசி விவசாயி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படி தொடர்ந்து விஜய் சேதுபதி படங்கள் ரிலீஸ் ஆகி இருந்ததால் சோசியல் மீடியாவில் கிண்டல் கேலிகள் எழுந்து இருந்தது.

vijaysethupathi

விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள்:

ஆனால், அதை விஜய் சேதுபதி கண்கொள்ளாமல் தன் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள பிசாசு 2 என்ற படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். மேலும், இந்த படத்தின் ரிலீஸ் குறித்து ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி அவர்கள் தற்போது பல படங்களில் கமிட்டாகி மும்முரமாக நடித்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி:

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான சீனியர் கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. அதில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும் பெண்கள் பிரிவில் 15 அணிகளும் பங்கு பெற்று இருந்தார்கள். மேலும், வருகிற 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுபவர்கள் ஆவார்.

விழாவில் அமைச்சர் கூறியது:

இந்நிலையில் இப்போட்டியின் தொடக்க விழாவில் நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தார்கள். அந்த வகையில் இவ்விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பது, பல கோடி மக்களைப் போல் நானும் விஜய் சேதுபதி ரசிகன். ஒரு பொது தொழிலில் இருந்து கொண்டு தெளிவான கருத்தை தைரியமாக சொல்லி அரசாங்கம் யாராக இருந்தாலும் இருக்கட்டும் என்ற தன்மையுடனும், சிந்தனையுடனும் பேசுபவர் விஜய் சேதுபதி என்று பெருமையாக அமைச்சர் பேசி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement