தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் மகேஷ்பாபு சமீபத்தில் ஸ்பைடர் என்ற படத்தின் மூலம் தமிழில் நேரடி கதாநாயகனாக களமிறங்கினார். மேலும் இவர் நடித்த பல படங்களின் ரீமேக்கில் தான் விஜய் நடித்து இருந்தார். அந்த திரைப்படங்கள் விஜய்க்கு மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்து இருந்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கில்லி, போக்கிரி போன்ற படங்கள் இவர் நடித்த படங்களிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்கள் தான். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மகேஷ் பாபு கில்லி படத்தால் தனது படத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பேசியுள்ளார்.
சென்னையுடன் ஒரு சிறப்பு பிணைப்பைக் கொண்டவர் நடிகர் மகேஷ் பாபு, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மகேஷ் பாபு செயின்ட் பீட்ஸ் பள்ளியில் கார்த்தி, யுவன் சங்கர் ராஜா மற்றும் சூரியா ஆகியோருடன் சேர்ந்து படித்தேன் அதன் பிறகு லயோலா கல்லூரியில் படித்தேன். எனது முழு வாழ்க்கையும் 1999 வரை சென்னையில் தான் இருந்தது” என்று சூப்பர் ஸ்டார் பேட்டியில்கூறியுள்ளார் மகேஷ் பாபு. மேலும் மகேஷ் பாபு தனது திரைப்படங்கள் மற்ற திரைப்படங்களில் மற்ற நட்சத்திரங்களால் ரீமேக் செய்யப்படுவதைப் பற்றி பேசும்போது, மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அது நிகழும்போது ஒரு திருப்தியைப் பெறுவதாகவும் கூறினார்.
இதையும் பாருங்க : செம்பருத்தி சீரியல் நடிகர் ஆதிக்கு உண்மையில் இவ்வளவு சம்பளமா ? அதை இதை தான் செய்கிறாரா ?
இதுகுறித்து பேசிய அவர் “அது மிகவும் சிறப்பு வாய்ந்த உணர்வு. ஆந்திராவில் போக்கிரி ஒரு பரபரப்பான வெற்றி பெற்றது. உடனே, விஜய் போன்ற ஒரு பெரிய நட்சத்திரம் அதைப் பார்த்து அதை ரீமேக் செய்தார். சல்மான் கானுக்கும் “வாண்டட்” என்ற பெயரில் ரீமேக் செய்தார் . இது எனக்கு ஒரு கனவு நனவான தருணம், நான் மிகவும் சிறப்பு வாய்ந்தவனாக உணர்கிறேன் ”என்று மகேஷ் கூறினார், தனது திரைப்படங்கள் ரீ மேக் செய்யப்படுவதை விரும்புவதாக என்று கூறினார். மேலும் மகேஷ் பாபு தமிழ்நாட்டில் தனது “ஒக்காடு” வெளியீட்டின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான உண்மையைத் கூறினார்
நடிகர் விஜய் நிகழ்த்திய தமிழ் பிளாக்பஸ்டர் “கில்லி” இன் ஒரிஜினல் வேர்ஷனான “ஒக்காடு”. படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியவுடன் சென்னை திரையரங்குகளில் தனது படத்தை அகற்றத் தொடங்கியபோது தான் மோசமாக உணர்ந்தேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் , “எனது எல்லா படங்களுக்கும் தமிழ் மக்கள் காட்டிய அன்பை பார்க்கும் போது சென்னை எப்போதும் எனது சிறப்பு நகரமாக இருந்தது. உண்மையில் “ஒக்காடு” படம் சென்னையில் நல்ல வரவேற்பை பெற்றது . “கில்லி” செய்ய படத்தின் ரீமேக் உரிமையை அவர்கள் வாங்கியபோது, அவர்கள் அதை சென்னையில் உள்ள திரையரங்குகளில் இருந்து அகற்றத் தொடங்கினர்.
இதனால் நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன் ஏனென்றால், இந்த படத்தை ரீமேக் செய்யப் போவதால் சென்னையில் இருந்து பலர் அதைப் பார்க்க விரும்பவில்லை. அந்த நாட்களில், சென்னையில் “ஒக்காடு” படத்திற்கு பரபரப்பான வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு எனது பல படங்களும் ஒரு தெலுங்கு படத்திற்கான சாதனை துவக்கத்தைப் பெற்றன. சென்னை ரசிகர்களுக்கு சிறப்பு நன்றி ”என்று கூறியுள்ளார் மகேஷ் பாபு.