செம்பருத்தி சீரியல் நடிகர் ஆதிக்கு உண்மையில் இவ்வளவு சம்பளமா ? அதை இதை தான் செய்கிறாரா ?

0
63929
aadhi
- Advertisement -

தொலைக்காட்சிகளில் தொடர்கள் 90 கால கட்டங்களில் இருந்தே ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் படங்களை பார்க்கிறார்களோ? இல்லையோ? தொலைக்காட்சி தொடர்களை தவறாமல் பார்க்கிற காலமாக தற்போது மாறிக் கொண்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் குடும்பத்துப் பெண்களுக்கு பொழுது போக்கே இந்த சீரியல் தொடர் தான். முதல் எல்லாம் குடும்பப் பெண்கள் மட்டும் தான் தொடர்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்கள். ஆனால், தற்போது ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் சீரியல்களை பார்க்கும் சூழல் உருவாகி உள்ளது. அதிலும் சமீப காலமாகவே ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்க்காக சூப்பர் ஹிட் சீரியல்களை கொடுத்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Related image

- Advertisement -

அந்த வகையில் தமிழக ரசிகர்கள் மத்தியில் அதிக இடம் பிடித்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “செம்பருத்தி” தான். இந்த செம்பருத்தி சீரியல் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதோடு இந்த தொடர் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர் ஆகும். அது மட்டும் இல்லாமல் தெலுங்கில் வெளியான ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரை தழுவி எடுக்கப்பட்டது தான் இந்த செம்பருத்தி சீரியல். இந்த சீரியலில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஷபானாவும், அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் பிரியா ராமனும் நடித்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : கிரிக்கெட் பாலினால் உதடு கிழிந்து 13 தையல். தீவிர சிகிச்சையில் பிரபல பாலிவுட் நடிகர்..

இந்நிலையில் இந்த சீரியலில் ஆதித்யா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிற நடிகர் கார்த்திக் ராஜ் அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2011 ஆம் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானவர். அதன் பின்னர் கார்த்திக் ஆபிஸ் தொடரில் நடித்தார். இந்த ஆபிஸ் சீரியல் மூலம் கார்த்திக் ராஜ் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் கார்த்திக் ராஜ் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று உள்ளார். அதோடு கார்த்திக் ராஜ் அவர்கள் 465, நாலு பேருக்கு நல்லதுன்னா ஏதும் தப்பில்லை போன்ற படங்களில் நடித்தார். ஆனால், சினிமாவில் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடக்கத்தால் மீண்டும் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார்.

-விளம்பரம்-
Image result for sembaruthi serial aadhi

இந்த செம்பருத்தி சீரியல் இந்த அளவிற்கு முதலில் இடத்தில் இருப்பதற்கு காரணம் கதைக் களம், ஆதி–பார்வதி இடையேயான காதல், நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு என்று சொல்லலாம். நடிகர் கார்த்திக் அவர்கள் எதையுமே நேருக்கு நேராக வெளிப்படையாக பேசும் இயல்புடையவர். இதனாலேயே இவர் சினிமா உலகில் பல எதிரிகளை சம்பாதித்து உள்ளார் என்று சமீபத்தில் நடந்த விருது விழாவில் மேடையில் அவரே கூறியிருந்தார். கார்த்திக் அவர்கள் இயல்பாகவே அன்பு செலுத்தும் குணம் உடையவர். இந்நிலையில் நடிகர் கார்த்திக் ராஜ் தான் சம்பாதிக்கும் பணத்தில் பல ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்து வருகிறாராம். செம்பருத்தி சீரியலில் நடிகர் கார்த்திக் ராஜ் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக கூறப்படுகிறது. இந்த பணத்தில் இருந்தும் இவர் பல ஏழை குழந்தைகளுக்காக செலவிட்டு வருகிறார். ஆனால், இது உண்மையா என்பது உறுதியாக தெரியவில்லை.

Advertisement