ஒரு எம்.பியாக பெருமையா இருக்கு – புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்த மோடியை பாராட்டிய இளையராஜா

0
1519
Ilayaraja
- Advertisement -

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த மோடிக்கு இளையராஜா வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். . இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத, தீவிர வலதுசாரி இந்துத்துவ கொள்கைவாதியான மற்றும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் காரணகர்த்தாவான சாவர்க்கர் பிறந்த நாளில் தான் திறக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த நாடாளுமன்றம் திறப்பு விழா குறித்த செய்தி தான் நாடு முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து நாட்டை காட்டிக் கொடுத்தவர் தான் சாவர்க்கர் என்று அவரைக் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், அவரை விமர்சித்து ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சி, திமுக, விசிக, கம்யூனிஸ்ட் காங்கிரஸ் உட்பட மொத்தம் 20 கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்திருக்கின்றனர்.அதுமட்டும் இல்லாமல் தமிழகத்தில் திருமால்வளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் இந்த நாளை துக்க நாளாக அனுசரிப்பதாக வீடுகளில் கருப்பு கொடி ஏந்த சொல்லி அறைக்கூவல் விடுத்திருக்கிறார்.

- Advertisement -

பிரதமர் மோடி செய்த செயல்:

இந்த நாளில் புதிய நாடாளுமன்றம் திறப்பதற்கு சாவர்க்கார் பிறந்தநாள் மட்டும் இல்லாமல் வேறு ஒரு காரணம் இருப்பதாகவும் புதிய சர்ச்சை எழுந்து இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவராக குடியரசுத் தலைவர் இருக்கிறார்.ஆனால், புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் அழைக்கப்படவே இல்லை. காரணம், அவர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் மூலம் பாஜகவின் ஜாதி வெறி இதில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது என்று இடதுசாரி ஜனநாயகவாதிகள் கொந்தளித்து இருக்கிறார்கள். அதேபோல் ஏற்கனவே, புதிய நாடாளுமன்றத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கூட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலித் பிரிவை சேர்ந்தவர் என்பதால் அவரையும் அழைக்கப்படவில்லை.

-விளம்பரம்-

கொந்தளிப்பில் இந்தியாவில் உள்ள 20 கட்சிகள்:

இது குறித்து நெட்டிசன்கள் எல்லாம் விமர்சித்து இருந்தார்கள். இப்படி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு 20 எதிர்க்கட்சிகள் புறக்கணித்து வரும் நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் எதிர்க்கட்சிகளுக்கு இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், யாரும் ஏற்கவில்லை. இப்படி நாடு முழுவதும் இந்த புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு கடும் எதிர்ப்பலைகள் கிளம்பி இருக்கிறது.

இளையராஜா வெளியிட்ட அறிக்கை :

அதே போல இன்னொரு புறம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் இசையமைப்பாளரும் ராஜ்யசபா நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான இளையராஜா, வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ‘பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார். குடிமகனாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய கட்டிட திறப்புவிழாவை மகிழ்ச்சியுடனுடம் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்த குறுகிய காலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தை கட்டுவதில் பங்காற்றியவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் உத்வேகமான தலைமையின் கீழ் உலகம் புதிய இந்தியாவைக் கொண்டாடும் தருணத்தில் கொள்கைகள் மற்றும் முடிவுகளை எடுப்பதற்கான உறைவிடமாக இந்தக் கட்டிடம் மாற நான் மனதார பிரார்த்திக்கிறேன். ராஜ்ஜியங்களை வெற்றிகரமாக ஆட்சி செய்தவர்கள் செங்கோலை நீதி, ஒழுங்கு, நேர்மை மற்றும் நெறிமுறைகளின் அடையாளமாக போற்றினர். இத்தகைய செங்கோல் சரியான இடத்துக்கு திரும்ப வந்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக, பிரதமர் மோடி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளார். அவருடைய கடமைக்கு உட்பட்ட செயல்களும் அதையே பிரதிபலிக்கின்றன. அவரது அனைத்து முயற்சிகளிலும் கடவுள் அவருடன் இருக்கட்டும். இந்த முக்கியமான தருணத்தில் அவரையும், இந்திய அரசையும் நான் மனதார வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement