நடிகர்களை விமர்சித்தாரா விஜய்.! முதன் முறையாக விஜய் தரப்பில் இருந்து விளக்கம்.!

0
813
vijay
- Advertisement -

‘சர்கார்’ இசை வெளியீட்டில் விஜய் பேசியதிலிருந்து, அவரைப் பற்றிய அரசியல் விவாதங்கள் தொலைக்காட்சியில் இடம்பெற்றன. போதாதா குறைக்கு விஜய்யின் மக்கள் தொடர்பாளரும் புலி படத்தின் தயாரிப்பாளரில் ஒருவரான பி. டி.செல்வகுமார்
விவாத நிகழ்ச்சியில் பேசும் போது “விஜய் தான் எப்போதுமே நம்பர் 1. ரஜினி மற்றும் அஜித் எல்லாம் நம்பர் 2 தான்” என்று பேசினார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை உருவானது.

-விளம்பரம்-


இதையும் படியுங்க : நடிகர் விஜய் மகன் சஞ்சய் பெயரில் நடந்த மோசடி..!வெளியான அதிர்ச்சி தகவல்..! 

- Advertisement -

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்’நமது  தளபதி விஜய் அவர்களின் முன்னாள்  மக்கள் தொடர்பாளராக நீண்டகாலம் நல்ல விதமாக    பணிபுரிந்தவர் தற்போது  ￰வேறு சில காரணங்களால்   அப்பணியில், நமது தளபதி விஜய் அவர்களுடன்  இல்லை என்பதை தங்களின்  மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன்.


மேலும், அவர், நமது மக்கள் இயக்கதில் யாதொரு பொருப்பையும் இதுநாள் வரை வகிக்கவில்லை !

-விளம்பரம்-


இருப்பினும், தளபதி விஜய் அவர்கள்  பெயரை பயன்படுத்தி ஒரு சிலர், அவர்களது சொந்த கருத்தை, தளபதி விஜய் அவர்களின்  கருத்தை போல் ஊடகங்களில் வெளியிடுவதை நமது மதிப்புமிகு தளபதி விஜய் அவர்கள் ஏற்க்கவில்லை என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.


அதோடு, நமது தளபதி விஜய்  அவர்கள் எந்த காலக்கட்டத்திலும், எச்சூழலிலும், சக நடிகர்களையோ, பொது மனிதர்களையோ, இழிவாக, தரம் தாழ்ந்தோ, ஒப்பீட்டு பேசியதில்லை ! அப்படி யாரையும் பேச சொல்லி யாருக்கும் நமது தளபதி விஜய்  அவர்கள்  அதிகாரம் அளிக்கவில்லை  என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.


ஆகவே,  தளபதி விஜய் குறித்த   தகவல்களை, ஊடகங்களில் பேசுவது, விவாதிப்பது, பங்கேற்று  கருத்து கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவோரின் கருத்துக்களை  யாரும் நம்பவேண்டாம் என இதன் மூலம்  கேட்டுக்கொள்கிறேன்.”

ஆகவே,  விஜய் குறித்த  தகவல்களை, ஊடகங்களில் பேசுவது, விவாதிப்பது, பங்கேற்று  கருத்து கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவோரின் கருத்துகளை  யாரும் நம்பவேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement