நிர்வாண போட்டோ ஷூட் – நடு ரோட்டில் ரன்வீர் சிங்கிற்கு தக்க பரிசு கொடுத்த தொண்டு நிறுவனம்.

0
366
Ranveersingh
- Advertisement -

ரன்வீர் சிங் இந்திய முழுவதும் தனக்கனே தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் பாலிவுட்டின் அசைக்க முடியாத நட்சத்திரங்களுள் இவரும் ஒருவர். ரன்வீர் இந்தியான பல்கலை கழகத்தில் பட்டம் பெற்றவர். சிறு வயதிலேயே மேடை நாடகம் , பள்ளி விழாக்கள் என நடிப்பு மீது அதிக ஆர்வம் உடையவராக இருந்திருக்கிறார். சினிமா மீது அதிக ஈடுபாடு கொண்டதால் தனது வாழக்கையை பாலிவுட் நோக்கி திருப்பினார். 2010 ஆம் ஆண்டு வெளியான பேண்ட் சர்மா பாராத் என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமனார். அனுஷ்கா ஷர்மாவிற்கு ஜோடியாக நடித்த ரன்வீருக்கு முதல் படமே கம்ர்ஷியல் ஹிட்டானது. நகைச்சுவை காதல் படமான அந்த படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியதால் , அறிமுக நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதும் கிடைத்தது.

-விளம்பரம்-

ரன்வீர் சிங் கடந்த 2013 முதல் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை காதலித்து வந்தார். நீண்ட நாட்களாக காதலில் இருந்த ஜோடிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்துக்கொண்டனர்.
ரன்வீர் சிங் எப்போதுமே வித்தியாசமாக உடை அணியக்கூடியவர். பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் கூட அவர் அதனை அத்தனை நம்பிக்கையுடன் அணிந்து வருவதை பார்த்தால் ஃபேஷன் மீது ரன்வீருக்கு இருக்கும் ஈடுபாடு வெளிப்படையாகவே தெரியும். உடைக்கு ஏற்ற மாதிரி சிகை அலங்காரத்தை மாற்றுவதுதான் ரன்வீரின் ஸ்டைல் . பாலிவுட்டின் ஸ்டைல் ஐகானாக ரன்வீர் கொண்டாடப்படுகிறார்.

- Advertisement -

ஹங்க் பர்ட் ரெனால்ட்ஸ்க்கு இது சமர்பனம் :-

ஹாலிவுட் நடிகர் ஹங்க் பர்ட் ரெனால்ட்ஸுக்கு சமர்பணம் செய்யும் விதமாக ரன்வீர் சிங் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு தனது நிர்வாண போஸை கொடுத்துள்ளார். ஹாலிவுட் நடிகர் ஹங்க் பர்ட் ரெனால்ட்ஸ் ஏற்கனவே கொடுத்திருந்த புகைப்படத்தை மாடலாக கொண்டு அதே போன்ற புகைப்படத்தை வெளியிட்டார். ஒரு சிலர் ரன்வீர் சிங் எடுத்த முயற்சியை பாராட்டினாலும், மற்றொரு புறம் இவரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு வந்தவண்ணமே உள்ளது.

நிர்வாண இருப்பது அவர் இல்லையாம் அவர் ஆன்மாவாம் :-

நடிகர் ரன்வீர் சிங் நான் உடல்ரீதியாக நிர்வாணமாக இருப்பது மிகவும் எளிதானது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக நான் நிர்வாணமாக இருந்துள்ளேன். முதலில் என் ஆன்மாவை நீங்கள் பார்க்க வேண்டும். அது எவ்வளவு நிர்வாணமாக இருக்கிறது என்று. நிச்சயமாக என் உடலோடு என் ஆன்மாவும் நிர்வாணமாகதான் இருக்கிறது. என்னால் ஆயிரம் பேருக்கு முன்னாள் நிர்வாணமாக இருக்க முடிகிறது. ஆனால், அந்த ஆயிரம் பேரும் என் முன்னால் அசௌகரியமாக இருப்பதாக தெரிவித்தார்.

-விளம்பரம்-

பெண்களின் உனர்வுகளை புன்படுத்திவிட்டதாக ரன்வீர் மேல் பாய்ந்த சட்டம் :-

அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு விவாத குரலும் எழுந்துள்ளது. சிலர் ரன்வீர் சிங்கின் செயல் மிகவும் துணிச்சலானது என்று பாராட்டியும் இருக்கின்றனர். இந்த நிலையில் மும்பையில் ரன்வீர் சிங் மீது தொண்டு நிறுவனம் ஒன்று போலீஸில் புகார் செய்துள்ளது. பெண்களின் உணர்வுகளை புன்படுத்திவிட்டதாக கூறி மும்பை போலீஸார் ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சில இடங்களில் ரன்வீர் சிங்கிற்கு எதிராக போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று ரன்வீர் சிங்கின் புகைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதோடு ரன்வீர் சிங்கிற்காக பொதுமக்களிடம் ஆடைகள் சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

Singh

நூதன போரட்டம் ரன்வீர் சிங்க்கு ஆடை வேண்டும் என :-

இந்தூரை சேர்ந்த `நேகி கீ திவார்’ என்ற தொண்டு நிறுவனம் ரன்வீர் சிங்கிற்கு கொடுப்பதற்காக பொதுமக்களிடம் பழைய ஆடைகளை சேகரித்து வருகிறது. ஆடைகள் சேகரிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி இருக்கிறது. பொதுமக்கள் பழைய ஆடைகளை போடுவதற்காக சாலையோரம் நன்கொடை பாக்ஸ் ஒன்றையும் தொண்டு நிறுவனம் வைத்துள்ளது. இது குறித்து ரன்வீர் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தும் தொண்டு நிறுவன பிரதிநிதி கூறுகையில், ரன்வீர் சிங் இளைஞர்களின் முன்மாதிரியாக இருக்கிறார். அவரை பல இளைஞர்கள் பின்பற்றுகின்றனர். ரன்வீர் சிங்கின் இந்த புகைப்படங்கள் மலிவான விளம்பரமாகவே தெரிகிறது. இது இளைஞர்களை பாதிக்கும் வகையில் உள்ளது இது தொடரக்கூடாது. எனவேதான் போராட்டம் நடத்துகிறோம் என்று தெரிவித்தார்.

Advertisement