இந்த கால சீரியல் என்பது மாமியார் மருமகள் சண்டையை தாண்டி காதல், காலேஜ் என பலவற்றையும் அலசும் ஊடமாக இருக்கிறது. அப்படி அதில் நடிக்கும் ஹீரோயின்களுக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
அதே போல் ஹிந்தியில் ஹிட் அடிக்கும் சீரியகளும் தமிழ் டப் செய்யப்பட்டு பிரபல டீவியில் ஒளிபரப்பப்படுகிறது. அதில் ஒன்று தான் இரு மலர்கள் என்ற சீரியல். இதில், நடிக்கும் நடிகை பிரக்யா.
இவருக்கு தமிழில் ரசிகர் பட்டாளம் அதிகம். சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டியில் தனக்கு காச நோய் இருப்பதாக கூறினார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், இந்த நோய் இருப்பது தெரிந்தும் ரசிகர்களுக்காக தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார் பிரக்யா. தற்போது வரை இதற்காக இவர் எந்த ஒரு சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் ரசிகர்கள் அவரை சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி கூறி வருகின்றனர்.