அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு திரை உலகிற்கு வந்த “பிகில்” படம் ரசிகர்கள் மத்தியில் பட்டையை கிளப்பியது. மேலும், விஜய்யின் பிகில் படம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு இந்த பிகில் படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்தது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் தற்போது “தளபதி 64” என்ற படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் நடிகை சாக்ஷி சவுத்ரி அவர்கள் ‘இந்த சம்பவத்தை பண்ண தளபதி விஜயுடன் தான் பண்ணுவேன்’ என்று ஓப்பனாக பேசி உள்ளார். இதைக் கேட்டு விஜய் ரசிகர்கள் மத்தியில் என்ன கலவரம் வெடிக்க போவது என தெரியாமல் உள்ளார்கள்.
பிகில் படம் ரசிகர்களை எல்லாம் தாண்டி பல சினிமா பிரபலங்களும் ஃபேவரட் படமாக அமைந்தது. மேலும், அவர்களும் விஜய்க்கு ரசிகர்களாக மாறினார்கள். அந்த வகையில் இணைந்தவர் தான் நடிகை சாக்ஷி சவுத்ரி. தெலுங்கில் முன்னணி நடிகையாக வருபவர் தான் நடிகை சாக்ஷி சவுத்ரி. இவர் தற்போது “இருட்டு” என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இவர் தமிழில் முதன் முறையாக சுந்தர்.சிக்கு ஜோடியாக இருட்டு என்ற போய் படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க ஹாரர், திரில்லர், காமெடி.ரொமாண்டிக் என அனைத்தும் உள்ள படமாக உருவாகி இருக்கிறது என்று கூறி உள்ளார்கள் படக்குழுவினர். மேலும், இந்த படத்தில் ரொமான்டிக் பாடல்கள் எல்லாம் சமீபத்தில் தான் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பயங்கர கிளாப் பெற்றது.
இதையும் பாருங்க : தமிழ் பாடலுக்கு கிடைத்த பெருமை. உலகளவில் யூடியூப் சாதனை பட்டியலில் சேர்ந்த ரௌடி பேபி.
அதில் நடிகை சாக்ஷி சவுத்ரி, சுந்தர் சியுடன் இணைந்து ரொமான்ஸ் செய்து உள்ளார். அதிலும் இவர்கள் இருவரும் செய்த லிப் லாக் சீன் எல்லாம் வேற லெவல்ல இருந்தது என்று கூறி உள்ளார்கள். இந்நிலையில் நடிகை சாக்ஷி சவுதிரி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்து உள்ளார். அதில் ஒருவர் இந்த லிப் லாக் சீனை நீங்கள் வேற யாருடன் செய்ய ஆசைப் படுகிறீர்கள் என்று கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல் நடிகை சாக்ஷி சௌத்ரி அவர்கள் ‘தளபதி விஜய்’ தான் என்று கூறி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இந்த பதிலைக் கேட்டால் விஜய் அவர்களே அதிர்ந்து போய் விடுவார் போல இருந்தது. இந்நிலையில் தளபதி ரசிகர்கள் இதை எப்படி தான் எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என தெரியவில்லை என்றும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
வி.இசட் துரை இயக்கிய பேய் படம் தான் “இருட்டு”. இந்த படத்தில் சுந்தர் சி அவர்கள் கதாநாயகனாக நடித்து உள்ளார். இதில் சாக்ஷி சவுத்ரி, வி.டிவி. கணேஷ், விமலா ராமன், யோகிபாபு, சாய் தன்சிகா உள்ளிட்ட பலர் நடிகர்கள் நடித்து உள்ளார்கள். கிரிஸ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி அவர்கள் வேறு ஒரு இயக்குனர் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்து உள்ளார் என்று தெரியவந்து உள்ளது.