ஜாபர் சாதிக் விவகாரம், போதைப் பொருள் தடுப்பு பிரிவு அனுப்பிய சம்மன் – அமீர் வெளியிட்ட ஆடியோ வைரல்.

0
305
- Advertisement -

போதைப் பொருள் தடுப்பு பிரிவு அனுப்பிய சம்மன் தொடர்பாக இயக்குனர் அமீர் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே போதை பொருள் கும்பலை கைது செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக டெல்லியில் போதை பொருள் கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனில் போலீசார் சோதனை நடத்தி .இருக்கிறார்கள் அதில் சுமாராக 1700 கிலோ மெப்பட்ரோன் என்ற போதை பொருளை பறிமுதல் செய்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதை பொருள் கடத்தலுக்கு முக்கிய நபராக செயல்பட்டவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் என்று தெரிய வந்திருக்கிறது. அவர் தயாரிப்பாளர் ஜாபர் சித்திக் என்பது தெரிய வந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் கயல் ஆனந்தி நடித்து வரும் மங்கை என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். இதற்கு முன் கூட இவர் சில படங்களை தயாரித்து இருக்கிறார். அதோடு இவர் போதை பொருள் சாம்ராஜ்யத்தின் தலைவராக இருக்கிறார்.

- Advertisement -

போதை பொருள் கடத்தல் விவகாரம்:

மேலும், இவர் தன்னுடைய சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து தான் இந்த போதப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. மைதீன் இறைவன் மிகப் பெரியவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் சலீம் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதை அடுத்து போலீஸ், இந்த மூன்று பேருமே சினிமாவில் முதலீடு செய்து செய்துள்ளார்களா? என்னென்ன படத்திற்கு பைனான்ஸ் செய்திருக்கிறார்கள்? என்ற தீவிர விசாரணைனையில் ஈடுபட்டது.

அமீர்-ஜாபர் இடையேயான உறவு:

அப்போது இயக்குனர் அமீர் அவர்கள் மைதீன் நடிக்கும் இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தை இயக்கி வருவது தெரிய வந்திருக்கிறது. இதனால் அமீருக்கும் இந்த போதைப் பொருள் கடத்தல் விவகாரத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்று சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அமீர் விளக்கம் ஒன்றையும் வெளியிட்டார். அதில், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.

-விளம்பரம்-

அமீர் விளக்க அறிக்கை:

நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கு அறிவர். அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறி இருந்தார். இதை அடுத்து இயக்குனர் அமீர்- ஜாபிர் சாதிக் இருவரும் சேர்ந்து காபி ஷாப் ஒன்றை இணைந்து தொடங்கி இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

அமீர் ஆடியோ:

இதனால் இயக்குனர் அமீர், ஜாபர் உடன் தொடர்பில் இருப்பதாக போலீஸ் அவரிடம் விசாரணை நடத்த இருக்கிறது. இந்த விசாரணைக்கு வரும் இரண்டாம் தேதி டெல்லியில் அமீர் ஆஜராகம்படி போலீஸ் போதை பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக இயக்குனர் அமீர் ஆடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். கொஞ்சமும் தயக்கமில்லாமல் என் தரப்பில் இருக்கும் உண்மையையும் நியாயத்தையும் எடுத்து சொல்வேன். நூறு சதவீதம் வெற்றியோடு இறைவன் அருளால் வருவேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement