இந்த தேதியோடு நிறைவடைகிறது காற்றின் மொழி சீரியல் – உறுதி செய்த சஞ்சீவ்.

0
2464
- Advertisement -

காற்றின் மொழி சீரியல் நிறைவடைந்ததை அந்த சீரியலின் நாயகன் சஞ்சீவ் உறுதி செய்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று விடுகிறது அதிலும் ராஜா ராணி, சின்னத் தம்பி, நாம் இருவர் நமக்கிருவார், ஆயுத எழுத்து, மௌன ராகம் என்று சினிமா பாணியில் டைட்டில்கள் வைத்து பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் சமீபத்தில் காற்றின் மொழி என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது இந்த தொடரில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும் இந்தத் தொடர் மூலம் தமிழ் சீரியலுக்கு அறிமுகமாகியிருக்கிறார் பிரியங்கா ஜெயின்.இந்த தொடரில் அமெரிக்க ரிட்டர்ன் ஆக அவரும் சஞ்சீவ் இருக்கும் கிராமத்து சூழலில் வாழும் கதாநாயகிக்கும் ஏற்படும் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் கண்மணி என்ற கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா.

இதையும் பாருங்க : செல்பி எடுக்கவே இல்லயாம். இத பாத்து தான் தல டென்சன் ஆகியிருக்காராம் – இதுக்கா இவர் வேலூர்ல இருந்து வந்தார்.

- Advertisement -

கடந்த ஆண்டு அக்டொபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் சமீபத்தில் சிவா மனசுல சக்தி சீரியலின் நாயகன் என்ட்ரி கொடுத்து இருந்தார். இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் பிரியங்கா ஏற்கனவே ஒரு சில கன்னட படத்தில் கதாநாயகியாகவும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு இவர் மிகவும் புதிதானவர் தான்.

இந்த சீரியல் விரைவில் நிறைவடைய இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவி வந்தது. மேலும், இந்த சீரியல் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதியோடு நிறைவடைய இருப்பதாக கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் விதமாக அந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சஞ்சீவ், உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி, நான் எங்கும் செல்லவில்லை விரைவில் என் அடுத்த ப்ராஜெக்ட் பற்றி உங்களிடம் தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement