நன்றாக சென்று கொண்டு இருந்த காற்றுக்கென்ன வேலி தொடரில் அடுத்த மாற்றம் – விலகிய முக்கிய நபர் (இனிமே என்ன ஆக போகுதோ)

0
738
kaatrukenna
- Advertisement -

காற்றுக்கென்ன வேலி சீரியலின் இயக்குனர் மாற்றப்பட்டு உள்ள தகவல்கள் தற்போது சோசியல் மீடியாவில் காட்டு தீயாய் பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் தொடர்களில் ஒன்று தான் காற்றுக்கென்ன வேலி சீரியல். இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. தற்போது இந்த தொடர் ரசிகர்கள் விரும்பி வரும் தொடர் ஆக மாறி இருக்கிறது. இந்த தொடரில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்து வருகின்றார்.

-விளம்பரம்-
 இந்த சீரியலில் அப்பாவை எதிர்த்து ஆசிரியையின் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வெண்ணிலா என்ற பெண் காலப்போக்கில் கல்லூரி பேராசிரியர் சூர்யாவை காதலிக்க துவங்குகிறார். இவர்களது காதல் கை கூடுமா என்பதன் பின்னணியை வைத்து இந்த ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் வெண்ணிலாவுக்கு அவருடைய அப்பா கல்யாண ஏற்பாடு செய்கிறார். ஆனால், வெண்ணிலா கல்யாண நாளன்று வீட்டை விட்டு வெளியேறி தன் கனவை நனவாக்க போராடுகிறார். பின் வெண்ணிலாவுக்கு பல்வேறு வகையில் பிரச்சனைகள் வருகிறது. இருந்தும் ஹீரோ வெண்ணிலாவுக்கு உறு துணையாக நிற்கிறார். தற்போது வெண்ணிலா போட்டியில் வெற்றி பெற டெல்லிக்கு செல்கிறார். இப்படி விறுவிறுப்புடன் இந்த சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

காற்றுக்கென்ன வேலி சீரியல்:

இடையில் இந்த சீரியல் இருந்து கதாநாயகன் விலகி இருந்தார். மேலும், சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து தர்ஷன் கூறியிருந்தது, எனக்கு இன்னொரு பிராஜக்ட்க்கும் இருக்கு.காற்றுக்கென்ன வேலி சீரியலுக்கு நேரம் ஒதுக்குவதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கு. அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. இதனால் காற்றுக்கு என்ன வேலி டீமுக்கும் எனக்கும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் விலகி இருக்கிறேன் என்று கூறி இருந்தார்.

சீரியலில் விலகிய நடிகர்கள்:

சூர்யா தர்சனுக்கு பதில் சூர்யா கதாப்பாத்திரத்தில் சுவாமிநாதன் அனந்தராமன் நடித்து வருகிறார். அவர் இதற்கு முன் மிதுன ராசி சீரியலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கன்னட சினிமாவிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு முன்னே காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து சூர்யாவின் அம்மாவாக சாரதா கதாபாத்திரத்தில் இருந்து மாளவிகா அவினாஷ் விலகியிருந்தார். அதேபோல் ஹீரோவுக்கு பெரியம்மாவாக நடித்தவரும் விலகி வேறு ஒருவர் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சீரியலில் செய்த மாற்றம்:

இப்படி பல மாற்றங்கள் சீரியலில் செய்தாலும் இளைஞர்கள் மத்தியில் இந்த சீரியல் அதிக பிரபலமாகி இருக்கிறது. தற்போது பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் விஜய் டிவி டெலிவிஷன் அவார்டு விழாவில் ஒரு விருது கூட காற்றுக்கென்ன வேலி சீரியல் வாங்கவில்லை. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்த நிலையில் சீரியலில் இருந்து புது மாற்றம் ஒன்று செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுஎன்னவென்றால், காற்றுக்கென்ன வேலி சீரியலின் இயக்குநர் மாற்றப் பட்டதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் தற்போது இந்த சீரியல் குறித்து புத்தம் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது காற்றுக்கென்ன வேலி சீரியலின் இயக்குனர் மாற்றப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. புது இயக்குனருடன் வென்னிலா மற்றும் சூர்யா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

வைரலாகும் புது இயக்குனர் புகைப்படம்:

மேலும், புது இயக்குனருடன் வெண்ணிலா மற்றும் சூர்யா இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால், இது குறித்த உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. அதேபோல இந்த புது இயக்குனர் ஏற்கனவே பல சீரியல்களை இயக்கி இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு சீரியலின் முன்னாள் இயக்குனரும் இவர் தான். சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் சீரியலிலும் இவர் நடித்திருக்கிறார்.

Advertisement