சீரியலில் தான் அப்படி, நிஜத்தில் வேற லெவல் – காற்றுக்கென்ன வேலி வெண்ணிலாவின் இன்ஸ்ட்டா கிளிக்ஸ்.

0
811
priyanka
- Advertisement -

விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வருபவர் வெண்ணிலா. இவரது நிஜப் பெயர் பிரியங்கா குமார். கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தார். நடிப்பு மீது அதிக ஆர்வம் இருந்ததால் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே தனது 15 வயதில் மாடலிங் செய்ய ஆரம்பித்தார். பல விளம்பரங்களில் நடித்துள்ளார். பிறகு மைசூரில் உள்ள வித்யாஷ்ரம் கல்லூரியில் பிபிஏ படித்தார். 2016-ல் நடந்த ‘மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா’ போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றதன் மூலம் பாப்புலரானார்.
இதை தொடர்ந்து, கன்னட சின்னத்திரையில் நடிப்பதற்கு பிரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

சின்னதிரையில் பிரியங்கா :-

ஸ்டார் ஸ்வர்ணா சேனலில் ஒளிபரப்பான கிருஷ்ணா துளசி தொடரில் துளசி கேரக்டரில் நடித்தார். இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு கலர்ஸ் கனடா சேனலில் ஒளிபரப்பான ராதா ரமணா தொடரில் பிங்க்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தது ரசிர்களை வெகுவாக கவர்ந்தது. கன்னடத்தில் பிஸியாக நடித்து வந்தவர் சன்டிவியின் சாக்லெட் சீரியல் மூலம் தமிழில் அறிமுகனார். அந்த தொடரில் ராகுல் ரவியுடன் இணைந்து இனியா கேரக்டரில் டஸ்கி ஸ்கின் டோனில் நடித்திருந்தார். பிரியங்காவின் நடிப்புக்கு தமிழில் அவ்வளவு ரசிகர்கள். நல்ல டிஆர்பியில் சென்றுகொண்டிருந்த சீரியல் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.

- Advertisement -

இதையும் பாருங்க : வாங்காத கடனை கட்ட சொல்லி மிரட்டுறாங்க தனியார் வங்கி மீது தேன்மொழி சீரியல் நடிகை புகார்.

காற்றுக்கென்ன வேலி முலம் ரீ-என்ட்ரி :-

பிறகு சொந்த ஊர் திரும்பிய அவர் விஜய் டிவி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். காற்றுக்கென்ன வேலி தொடரில் சூர்ய தர்ஷனுடன் இணைந்து நடித்து வருகிறார். வெண்ணிலா என்ற கேரக்டரில் கல்லூரி மாணவியாக பிரியங்காவும், ஆசிரியராக சூர்யாவும் நடிக்கின்றனர். இந்த சீரியலில் கல்லூரி சீன்கள் அதிகம் என்பதால் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். 20 வயதாகும் பிரியங்காவுக்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம்.

-விளம்பரம்-

சீரியலில் பல மாறங்கள் தடைகளை தான்டி ஓளிபரப்பாகிறது :-

சீரியலின் முக்கிய வில்லி கதாபாத்திரங்களில் ஒன்றான மீனாட்சி ரோலில் நடித்து வந்த நடிகை சீரியலில் இருந்து வெளியேறினார். தற்போது மீனாட்சியாக நடிப்பவர் ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை சுஜாதா பஞ்சு. இது முதன் முறையல்ல . இந்த சீரியலில் நடித்து வரும் முக்கிய கதாபாத்திரங்கள் வெளியேறுவதும், அவர்களுக்கு பதிலாக புதிய நபர்கள் நடிக்க வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. சமீபத்திய மாற்றத்தின் படி, மாறாவாக நடித்து வந்த புலி ராகவேந்திரனுக்கு பதிலாக சந்துரு நடித்து வருகிறார். இப்படி ஒருபக்கம் பல மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்தாலும் ரசிகர்கள் இந்த சீரியலை வெற்றி பாதையில் எடுத்து செல்கின்றனர். அதற்கு காரணம், சீரியலின் திரைக்கதை தான்.

பிரியங்காவே வெளியேறுவதாக வந்த வதந்தி :-

இதை தொடர்ந்து பல வாரங்களாகவே இந்த சீரியலில் இருந்து பிரியங்கா விலகுகிறார் என்று சோசியல் மீடியாவை பல்வேறு வதந்திகள் வந்து கொண்டிருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து கேள்வி கேட்டிருந்தார்கள். இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் பிரியங்கா பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் அவர், என் மீது இவ்வளவு அன்பு வைத்ததற்கு ரொம்ப நன்றி. நான் சீரியலை விட்டு விலகவில்லை. இதெல்லாம் என்னை பிடிக்காதவர்கள் செய்கின்ற வேலை. தயவுசெய்து இந்த மாதிரி பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள். நான் காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து விலகவில்லை. இதை பரப்புங்கள் என்று பதிவிட்டிருந்தார். இப்படி பிரியங்கா பதிவிட்டிருந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது.

வைரலாகும் இன்ஸ்ட்டா கிளிக்ஸ் :

இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களை பார்த்தால் ரசிகர்கள் வாயடைத்து போய்விடுவார்கள். அந்த அளவுக்கு செம்ம மாடர்னான, கிளாமர் புகைப்படங்கள் வெளியிடுகிறார். அந்த வகையில் இரண்டு நாளைக்கு முன்பு வெண்ணிலா வெளியிட்ட பிளாக் ட்ரெஸ் கிளாமர் புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரல். அந்த அளவுக்கு செம்ம மாடர்னான, கிளாமர் புகைப்படங்கள் வெளியிடுகிறார். பலருக்கும் இந்த புகைப்படத்தில் இருப்பவர் காற்றுக்கென்ன வேலி வெண்ணிலாவா என சந்தேகப்படும் அளவுக்கு வித்தியாசமான லுக்கில் இளைஞர்களின் மனதை பறிக்கும் பிரியங்கா.

Advertisement