இளம் வயதில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர்.

0
1099
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலுக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அண்ணன் – தம்பி, கணவன் – மனைவி, காதல் ஜோடி, புதுமண  என பலவிதமான கான்செப்ட்களில் விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் இளைஞர்களை மிகவும் கவர்ந்த தொடராக உள்ளது.இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. தற்போது இந்த தொடர் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர் ஆக மாறி இருக்கிறது.

-விளம்பரம்-

சிரியலின் கதை :

இந்த சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்து வருகின்றார். ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் வெண்ணிலாவுக்கு அவருடைய அப்பா கல்யாண ஏற்பாடு செய்கிறார். ஆனால், வெண்ணிலா கல்யாண நாளன்று வீட்டை விட்டு வெளியேறி தன் கனவை நனவாக்க போராடுகிறார். பின் வெண்ணிலாவுக்கு பல்வேறு வகையில் பிரச்சனைகள் வருகிறது. இருந்தும் ஹீரோ வெண்ணிலாவுக்கு உறுதுணையாக நிற்கிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த சிரியலில் நடிக்கும் ராகவேந்திரன் என்பவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கையில் ட்ரிப்ஸ் ஏற்றியப்படி வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் ஒருதலைக்காதல் தோல்வி என்பது போல் தலைப்பு கொடுத்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. இதற்கு பலரும் ஆறுதல் கூறி இருந்தார்கள். ஆனால், அதற்குள் அவர் தற்கொலை முயற்சி செய்து ஆஸ்பிடல் இருப்பதாக வதந்திகள் இணையத்தில் வைரல் ஆனது.

வதந்ததிக்கு முற்றுப்புள்ளி :

அதை அவர் ஜாலியாக தன்னுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போஸ்டை சீரியஸான விஷயமாக மாற்றி விட்டார்கள். இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது ராகவேந்திரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு வீடியோவை வெளியிட்டு விளக்கமும் கொடுத்திருந்தார். இந்த நிலையில் தான் “காற்றுக்கென்ன வேலி” படத்தில் வரும் நடிகர் ஒருவர் உண்மையிலேயே தற்கொலை சேத்திக்கொண்டுள்ளார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிங்கர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

ஹரி பற்றிய தகவல் :

“காற்றுக்கென்ன வேலி” சிரியலில் கதாநாயகி வெணிலாவின் காலேஜ் நண்பராக தமிழ் என்ற கதாபாத்திரத்தில் கானா பாடகர் ஹரி நடித்திருப்பார். இவர் பல நிகழ்ச்சிகளில் கானா பாடல்களை பாடியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தவமாய் தவமிருந்து சீரியலில் பாண்டியன் திருமணத்தன் போது பாடப்பட்ட பாடல் கூட இவர் பாடியதுதான். இந்நிலையில் இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சீரியலில் நடிக்க வந்தார்.

தற்கொலை செய்துகொண்ட ஹரி :

இந்த சிரியலில் கதாநாயகி வெண்ணிலாவின் நண்பராக ஹரி நடித்தால் அவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமானது. இந்நிலையில் தான் நேற்று தீடிரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இவரின் மறைவை அறிந்த சக நடிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஏன் இவர் இப்படி செய்தார் என்று வருந்தி அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement